Skip to main content

வடிவேலுவின் அட்ராசிட்டியால் ஷூட்டிங் ஸ்பாட்டில் கலகலப்பு

Published on 20/07/2022 | Edited on 20/07/2022

 

vadivelu making fun at 'chandramukhi 2' shooting spot

 

'சந்திரமுகி 2', 17 வருடங்கள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகிவருகிறது.  பி.வாசு இயக்கும் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு மற்றும் ராதிகா நடிக்கிறார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு மைசூரில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

 

இந்நிலையில் 'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பின் போது வடிவேலு அட்ராசிட்டி பண்ணும் வீடியோவை வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் வடிவேலு ஒரு பிரபல படத்தில் தான் செய்த காமெடியை நடித்து காண்பிக்கிறார். அவரது காமெடியை பார்த்து அருகில் இருந்த ராகவா லாரன்ஸ் மற்றும் வீடியோ எடுத்த ராதிகா ரசித்து சிரிக்கின்றனர். இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ராதிகா வெளியிட்டு வடிவேலு செய்யும் காமெடி எந்த படத்தில் இடம்பெறும் என ரசிகர்களை யூகிக்க சொல்லி குறிப்பிட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் இந்த காமெடி விஜய்யின் சுறா படத்தில் இடம்பெறும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.  இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நம்பமுடியவில்லை. அருமையான மனிதர்” - ராதிகா

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
radhika sarathkumar condolence daniel balaji passed away

காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா, உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் டேனியல் பாலாஜி(48). திருவான்மியூரில் தனியாக வசித்து வந்த நிலையில் நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். 

இவரது மறைவு திரைத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டேனியல் பாலாஜியின் மறைவு செய்தி அறிந்த இயக்குநர்கள் கௌதம் மேனன், வெற்றிமாறன், அமீர் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக அவருடைய உடல் வைக்கப்பட்டுள்ளது. டேனியல் பாலாஜி ஏற்கனவே கண்களை தானம் செய்திருந்த நிலையில் அவருடைய கண்கள் தானமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. 

radhika sarathkumar condolence daniel balaji passed away

திரைத்துறை சார்ந்த பிரபலங்கள் அவரது மறைவுக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ராதிகா, “நம்பமுடியவில்லை. டேனியல் பாலாஜி எங்களது ராடான் சித்தி தொடரில் அறிமுகமான ஒரு திறமை மிக்க நடிகர். நெகடிவ் ரோலில் சித்தி தொடரில் நடித்த போதிலும் பெரும் புகழ் அவருக்கு கிடைத்தது. அருமையான மனிதர் அவர். அவரது மறைவு என்னை  துயரில் ஆழ்த்துகிறது.  அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என பதிவிட்டுள்ளார். 

டேனியல் பாலாஜி, சிறு வயதிலே ராதிகா நடித்த சித்தி சீரியல் மூலம் நடிகராக அறிமுகமான நிலையில், டேனியல் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்றதால், அவர் அடுத்து நடித்த அலைகள் சீரியல் முதல் அவருக்கு டேனியல் பாலாஜி என்று பெயரிடப்பட்டது. அதற்கு முன்பு வரை பாலாஜி என்று மட்டுமே அவருக்கு பெயராக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“ஒரே ஒரு மாமன்னன் படம்தான் பண்ணேன்...” - அனுபவம் பகிர்ந்த வடிவேலு 

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
vadivelu about maamanna in  ciff

21வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா, டிசம்பர் 14 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை சென்னையின் பல்வேறு திரையரங்குகளில் நடைபெற்றது. இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் (Indo Cine Appreciation Foundation) கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் இந்த விழாவைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்தாண்டு திரைப்பட விழா போட்டியில் தமிழ் பிரிவில், அநீதி, அயோத்தி, கருமேகங்கள் கலைகின்றன, மாமன்னன், போர்த்தொழில், ராவணக் கோட்டம், சாயவனம், செம்பி, ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன், உடன்பால் மற்றும் விடுதலை பாகம் 1 உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டன.

இதில் மாமன்னன் படத்துக்காக வடிவேலுவுக்கு சிறந்த நடிகர் விருது கொடுக்கப்பட்டது. மேடையில் பேசிய அவர், “அழுகிற சீனெல்லாம் இப்போது ஒர்க்கவுட்டாகாது. அப்படி இருந்தும் மாமன்னன் படத்தை நீங்க பார்த்து ரசிச்சிருக்கீங்க. அதை எப்படி ஏத்துக்கிட்டீங்கன்னு புரியல. அழுததுக்கு விருது கொடுத்திருக்கீங்க. அதுதான் என்னுடைய வாழ்க்கையும் கூட. அது படம் அல்ல என்னுடைய வாழ்வியல். இந்த வெற்றி, மாரி செல்வராஜுக்கு சேர வேண்டும். அவர் வெற்றிமாறன் மாதிரி. இந்த வயசில் அவருடைய அனுபவம், நம்ம பட்ட கஷ்டத்தையெல்லாம் சொல்றாரு. 

மாமன்னன் படத்தில் இருக்கிற எல்லா சீனையும் புரட்டி போட்டு பார்த்தா, எல்லாமே காமெடி சீனாத்தான் இருக்கும். இதை மாரி செல்வராஜே என்னிடம் சொன்னார். இப்போ இருக்கிற டைரக்டர் எல்லாம், நடிகர்கள் சத்தமா பேசுனா, நம்ம உடல் மொழியில் கத்தாம மெல்ல ஆக்ட் பண்ணு எனச் சொல்கின்றனர். எல்லா ஷூட்டிங் ஸ்பாட்டிலும் நம்ம உடல் மொழிதான் ஓடிக்கிட்டு இருக்கு. நம்ம கலவை இல்லாத இடமே இல்லை என்கிறபோது ரொம்ப சந்தோசமா இருக்கு.  

ஒரே ஒரு மாமன்னன் படம்தான் பண்ணேன். வர கதையெல்லாம் சோக கதையா இருக்கு. ஒரே அழுகை. அதனால் ஒரு 5 வருஷம் கழிச்சு இது மாதிரி கதையை பார்ப்போம் என முடிவெடுத்துள்ளேன். மாமன்னன் படத்தில் டைரக்டர் அவருடைய வலியையும் சொல்லியிருந்தார். ஏழை மக்களின் வலியையும் சொல்லியிருந்தார். அந்த கதைக்கு விருது வாங்கினது ரொம்ப பெருமை” என்றார்.