2006ஆம் ஆண்டு வெளியான இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் மாபெரும் வெற்றி பெற்றதையொட்டி இப்படத்தின் இரண்டாம் பாகமான இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்ற படத்தை இயக்குனர் ஷங்கர் தயாரிக்க திட்டமிட்டார். பின்னர் இதிலும் கதாநாயகனாக நடிக்க வடிவேலுவையே ரூ.1.50 கோடி சம்பள முன்பணம் கொடுத்து மீண்டும் ஒப்பந்தம் செய்தார் இயக்குனர் சிம்பு தேவன். மேலும் இப்படத்திற்கு பூஜை போடப்பட்ட நிலையில் படப்பிடிற்காக சென்னையில் 6 கோடி ரூபாய் செலவில் அரங்கு அமைத்து இருந்தனர். இந்நிலையில் படக்குழுவினருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வடிவேலு நடிக்க மறுத்துவிட்டதனால் படம் நின்று போனது. அதிருப்தி அடைந்த ஷங்கர் வடிவேலு மீது திரைக்கதையில் தலையிடுவதாகவும், படக்குழுவினர் கொடுத்த உடைகளை அணிய மறுப்பதாகவும், கூறி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார். பின்னர் இதனை பரிசீலித்த நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பி வடிவேலுவிடம் விளக்கம் கேட்டது. இந்நிலையில் தற்போது இந்த பிரச்சினையில் தயாரிப்பாளர்கள் சங்கம் இறுதி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி படப்பிடிப்பில் வடிவேலு கலந்துகொள்ள வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அரங்கு அமைக்க படக்குழுவினர் செலவிட்ட ரூ.6 கோடியையும், அட்வான்ஸ் தொகையான ரூ.1.50 கோடி சேர்த்து வட்டியுடன் ரூ.9 கோடியை அவர் திருப்பி செலுத்த வேண்டும் என்றும் கெடு விதித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து இந்த கெடுவிற்கு பதில் அளித்த வடிவேலு, 24ஆம் புலிகேசி படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும் விரைவில் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் தயாரிப்பாளர் சங்க வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
நடிச்சுக் கொடுங்க, இல்லைனா சங்கத்துக்கு 9 கோடி அபராதம் கட்டுங்க... - வழிக்கு வந்த வடிவேலு!
சார்ந்த செய்திகள்
Next Story
வடிவேலு பேய் மாமாவா...? ரசிகர்கள் எதிர்பார்ப்பு !
'மெர்சல்' படத்திற்கு பிறகு '24ஆம் புலிகேசி' பட பிரச்சனையால் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கும் நடிகர் வடிவேலு அடுத்ததாக முழுநீள காமெடி படமான 'பேய் மாமா' படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதோடு வடிவேலு படம் பொறித்த போஸ்டர் ஒன்றும் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இப்படத்தை சக்தி சிதம்பரம் இயக்கவுள்ளதாகவும் அந்த போஸ்டரில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த போஸ்டர் பொய்யான ஒன்று என்று மற்றொரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இருந்தும் ரசிகர்கள் மத்தியில் சக்தி சிதம்பரம் வடிவேலு இணையும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சக்தி சிதம்பரத்தின் என்னம்மா கண்ணு, காதல் கிறுக்கன், இங்கிலீஷ்காரன், கோவை பிரதர்ஸ், வியாபாரி படங்களில் ஏற்கனவே வடிவேலு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
வடிவேலுவிற்காக காத்துக்கொண்டிருக்கும் மருதமலை கூட்டணி !
ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கும் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தின் படப்பிடிப்பு வடிவேலுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பாதியிலேயே நின்றது. இதையடுத்து இப்படத்தின் பிரச்சினை முடியும் வரை, வேறு எந்தவொரு படத்திலும் வடிவேலுவை ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவிற்கு ரெட் கார்ட் போட்டது. இதற்கிடையே இப்பிரச்சனை விரைவில் முடியும் என எதிர்பார்ப்பில் சில இயக்குனர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். அந்தவரிசையில் இயக்குனர் சுராஜ் நீண்ட நாட்களாக வடிவேலுவிற்காக காத்துக் கொண்டிருக்கிறார் தகவல் வெளியாகியுள்ளது. விமல், பார்த்திபன், வடிவேலு நடிக்க இவர் இயக்கும் புதிய படத்தின் முதல்கட்டப் பணிகள் அனைத்துமே முடிக்கப்பட்டு படப்பிடிப்பிற்கு படக்குழு தயாராக இருக்கும் நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தில் இன்னும் வடிவேலு பிரச்சினை தீராததால், தன் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க முடியாமல் இன்னமும் காத்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் சுராஜ் என தகவல்கள் வெளியாகியுள்ளன.