Advertisment

“அந்த வீடியோவால் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன்” -வடிவேலு கடிதம்

vadivelu

வைகை புயல் வடிவேலு என பலராலும் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் வடிவேலு. சமீப ஆண்டுகளாக இவர் திரையுலகில் நடிக்கவில்லை என்றாலும் இவரது காமெடிகளை வைத்து உருவாகும் மீம்களின் மூலம் இன்னும் ட்ரெண்டிங்கில் இருக்கிரார்.

Advertisment

நடிகர் சிங்கமுத்துவும், வடிவேலும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டனர். நில மோசடி விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையேயான வழக்கு நிலுவையில் இருக்கிறது. இதனிடையே நடிகர் மனோபாலா நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் சிங்கமுத்து, வடிவேலு தொடர்பாக சில கருத்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சிறப்பு அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார் வடிவேலு.

Advertisment

புகாரளித்த கடிதத்தில், "நான் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 30 வருடங்களாக உறுப்பினராக உள்ளேன். மேலும், நடிகர் சங்கத்திற்காக என்னால் முடிந்த உதவிகளைசெய்து வருகிறேன். நடிகர் மனோபாலா நடத்தும் ‘வேஸ்ட் பேப்பர்’ என்கிற யூடியூப் சேனலில் மனோபாலா என்னைபற்றி சில கேள்விகளை சிங்கமுத்துவிடம் கேட்க, அதற்கு அவர் என்னைபற்றி தரக்குறைவாகவும் தவறான செய்திகளையும் பொய்பிரச்சாரங்கள் செய்தும் பதிலளித்துள்ளார்.

அந்த வீடியோவை பல பிரபல நடிகர்கள் உள்ள SIAA லைப் மெம்பர் ஷிப் என்கிற வாட்ஸ அப் குரூப்பிலும் பகிர்ந்துள்ளார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். ஏற்கனவே நில மோசடி விவகாரம் தொடர்பாக எனக்கும் சிங்கமுத்துவுக்கும் இடையேயான வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதை இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். ஆகையினால் மனோபாலா மற்றும் சிங்கமுத்து இருவர் மீதும் நடிகர் சங்க சட்ட விதி எண்: 13-ன் படி தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

actor Vadivelu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe