24am pulikesi

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

சம்பள பிரச்சனை காரணமாக வடிவேலு கதாநாயகனாக நடிக்க வேண்டிய படங்கள் யோகி பாபு வசம் மாறுகின்றன. திரைத்துறையில் தனக்கென ஒரு இடத்தையும், ரசிகர்களையும் சேர்த்து வைத்திருக்கிறார் வடிவேலு. சில அரசியல் குழப்பங்களால் கடந்த ஒரு சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்து வந்த வடிவேலு தற்போது முழு நேரமாக சினிமாவில் நடிக்க தயாராக இருக்கிறார். 24ஆம் புலிகேசி படத்தில் நடிக்க இருக்கிறார் என்று முதலில் செய்திகள் வெளியானது. பின்னர், வடிவேலு மேல் போடப்பட்டுள்ள ரெட் கார்டின் காரணமாக நடிக்க முடியவில்லை என்று சொல்லப்பட்டது. இந்த பிரச்சனைகளை சரிப்படுத்தி வந்த நிலையில், திடீரென தற்போது அவருக்கு புது பிரச்சனை தொடங்கியுள்ளது. அதுதான் சம்பள பிரச்சனை. வடிவேலு ஒரு படத்திற்கு நடிக்க சுமார் நான்கு கோடி ரூபாய் வரை கேட்கிறாராம். தயாரிப்பாளர்கள் சம்பள பணத்தை குறைத்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டும். அவர் கீழ் இறங்கி வரவில்லை. அதனால் தயாரிப்பாளர்கள் எல்லாம் வடிவேலுவை புக் செய்யாமல் அதற்கு பதிலாக யோகி பாபுவை புக் செய்து வருகின்றனராம்.

Advertisment