Skip to main content

‘தனியாக இருந்தால் கழுத்தை அறுத்து விடுகின்றனர்’- வடிவேலு வேதனை

Published on 03/07/2019 | Edited on 03/07/2019

சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகே உள்ள கலியாந்தூரில் ஐயனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மழை வேண்டி புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது. கிராம மக்கள் ஐந்து புரவிகளை ஊர்வலமாக எடுத்து சென்று கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். 
 

vadivel

 

 

இவ்விழாவில் வைகை புயல் வடிவேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வள்ளி திருமணம் நாடகத்தை தொடங்கி வைத்தார். 
 

இதனையடுத்து அவர் பேசும்போது,“ஐயனாருக்கு அடிக்கடி திருவிழா நடத்தி மழையை வரவழைக்க வேண்டும். தண்ணீர் பிரச்சினை எல்லா இடங்களிலும் உள்ளது. தண்ணீரை வீணாக்காமல் சேமிக்க இளைஞர்கள் முன் வரவேண்டும்.
 

கிராமத்தின் பாரம்பரியமும், பண்பாடும் உலகத்திற்கே உதாரணமாக உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
 

இன்றைய உலகில் மற்றவர்களுக்கு உதவும் குணம் மனிதர்களிடம் குறைந்து வருகிறது. முன்பெல்லாம் ஓரிடத்திற்கு வந்தால் தங்க வைத்து தண்ணீர் தருவார்கள். இன்று தனியாக இருந்தால் கழுத்தை அறுத்து விடுகின்றனர்.
 

சாலையில் மயங்கி கிடப்பவனுக்கு தண்ணீர் கொடுத்து அனுப்புவார்கள். தற்போது அவனது உடமைகள் பறிபோய் விடுகிறது” என வேதனை தெரிவித்தார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்னைவிட வடிவேலு சோ க்யூட்”- ராஷ்மிகா ட்வீட்

Published on 25/02/2020 | Edited on 25/02/2020

கடந்த 2016ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி செம ஹிட்டான படம் கிரிக் பார்டி. இந்த படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான ராஷ்மிகா மந்தானா. கீதா கோவிந்தம் என்னும் தெலுங்கு படத்தில் தன்னுடைய வெகுளியான நடிப்பால பலரின் மனதை கொள்ளை கொண்டார். தற்போது தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக மிகவும் இளம் வயதிலேயே வளர்ந்து நிற்கிறார். 
 

rashmika

 

 

தற்போது வெங்கி குடுமுலா இயக்கத்தில் நிதினுடன்  ராஷ்மிகா மந்தனா நடித்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வரும் படம் பீஷ்மா. இது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த படத்தின் புரொமோஷனின்போது ராஷ்மிகா மந்தானா கொடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். அது செமையாக வைரலானது. இந்நிலையில் அவருடைய ஒவ்வொரு போஸிற்கும் ஏற்றார்போல வடிவேலு புகைப்படத்தை வைத்து மீம் ஒன்று இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

அதை ட்விட்டரில் பகிர்ந்து, “என்னால் ஒத்துக்கொள்ள முடியாது. வடிவேலு சோ க்யூட்” என்று பகிர்ந்துள்ளார். 

 

 

Next Story

வடிவேலுவால் கமலின் அடுத்த படம் வெளியாவதில் சிக்கல் ?

Published on 14/11/2019 | Edited on 14/11/2019

இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தின் பிரச்சனைகளை வடிவேலு தற்போது தீர்த்துவிட்டு சினிமாவில் மீண்டும் ஒரு வலம் வருவார் என்று அவருடைய ரசிகர்கள் எதிர்பார்க்கும் நிலையில் மேலும் ஒரு பிரச்சனையில் வடிவேலு சிக்கியிருக்கிறார்.
 

vadivelu

 

 

இந்தியன் 2 படத்தை தொடர்ந்து தலைவன் இருக்கின்றான் படத்தை கமல் இயக்கி, நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் வடிவேலுவையும் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் ஆர்கேவிடம் வடிவேலு, ‘நானும் நீயும் நடுவுல பேயும்‘ என்கிற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு முன்பணமாக ஒரு கோடி ரூபாய் பணத்தை வாங்கியுள்ளார். அந்த படத்தில் கதை சரியில்லை என்று பல மாறுதல்களையும் செய்துள்ளார். இதுபோல நாட்களை வடிவேலு கடத்தியுள்ளார். இதனால், படப்பிடிப்பு தொடங்கப்படாமலேயே இருந்துள்ளது. எனவே, கொடுத்த முன்பணம் ஒரு கோடி ரூபாயைத் திரும்பக் கேட்டுள்ளார் நடிகர் ஆர்.கே. அதையும் வடிவேலு திரும்ப அளிக்கவில்லை. இதையே தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஆர்.கே. புகாராகக் கொடுத்துள்ளார். 

அந்தப் புகாரில், ‘‘தலைவன் இருக்கின்றான் படத்தில் வடிவேலு நடிக்கட்டும். அதில் எவ்விதப் பிரச்சினையுமில்லை. ஆனால், எனக்குக் கொடுக்க வேண்டிய 1 கோடி ரூபாய் பணத்தைக் கொடுத்தால் மட்டுமே படத்தை வெளியிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

தலைவன் இருக்கின்றான் படத்தில் வடிவேலு நடிக்கிறாரா என்று இன்னும் அதிகாரப்பூர்வ தகவலே வெளியாகாத நிலையில் தலைவன் இருக்கின்றான் படத்திற்கு வடிவேலுவால் வெளியாவதில் வந்துள்ளது.