Skip to main content

கரோனாவிற்கு டிக் டாக் மூலம் கோடிக்கணக்கில் நிதி திரட்டிய நடிகை!

Published on 13/05/2020 | Edited on 13/05/2020
fsafa

 

கரோனா வைரஸ் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தினக்கூலியை நம்பியுள்ள பணியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகியுள்ளது. இந்த தினக்கூலிப் பணியாளர்களுக்கு சினிமா பிரபலங்கள் உதவி வருகின்றனர்.


அந்தவகையில் ‘திருட்டுப்பயலே-2’ இந்தி ரீமேக்கில் நடிக்கும் பிரபல இந்தி கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவ்தொலா டிக்டாக் மூலம் ஸூம்பா, லதின், டபாடா நடன வகுப்புகளை நடத்தி, ரூ.5 கோடி நிதி திரட்டி கரோனா நிவாரணத்துக்கு வழங்கி உள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறும்போது... ''கரோனா பாதிப்புகளுக்கு அனைவரும் உதவ வேண்டும். எவ்வளவு நன்கொடை கொடுத்தாலும் அதை குறைத்து மதிப்பிடக்கூடாது. நிவாரணம் வழங்கிய அரசியல்வாதிகள், நடிகர்களை பாராட்டுகிறேன்'' என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாடகர் பரிசளித்த தங்க கேக் - விமர்சனத்திற்கு உள்ளான லெஜண்ட் பட நடிகை

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
Urvashi Rautela cuts 24-carat gold cake with Honey Singh gets criticise

பாலிவுட்டில் பல்வேறு பாடல்களுக்கு நடனமாடியும் சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்து பிரபலமானவர் ஊர்வசி ரவுதெலா. தமிழில் லெஜண்ட் சரவணன் நடிப்பில் வெளியான ‘தி லெஜண்ட்’ படம் மூலம் அறிமுகமானார். தமிழ், இந்தியை தவிர்த்து தெலுங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் ஆல்பம் பாடல்களில் நடித்தும் வருகிறார். அந்த வகையில் தற்போது பிரபல ராப் பாடகர் ஹனி சிங்குடன் இணைந்து ‘செகண்ட் டோஸ்’ என்ற ஆல்பத்தில் நடித்து வருகிறார். 

அதன் படப்பிடிப்பு தளத்தில் நேற்று (25.02.2024) தனது 30வது பிறந்தநாளை ஊர்வசி ரவுதெலா கொண்டாடிய நிலையில், பாடகர் ஹனி சிங் அவருக்கு 24 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட கேக்கை பரிசாக வழங்கினார். இது தொடர்பான புகைப்படங்களை ஊர்வசி ரவுதெலா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அப்புகைப்படம் தற்போது வைரலாகி கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.  

Next Story

தங்க ஐ போனை தொலைத்த பிரபல நடிகை

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

Urvashi Rautela loses 24 carat gold iPhone during India vs Pakistan match

 

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023ன், இந்தியாவின் 3வது லீக் போட்டி கடந்த 14ஆம் தேதி குஜராத் அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணியை இந்தியா எதிர்கொண்ட நிலையில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த போட்டியை காண பல்வேறு முக்கிய பிரபலங்கள் மைதானத்திற்கு வருகை தந்திருந்தனர். அதில் திரை பிரபலமான நடிகை ஊர்வசி ராவ்டேலாவும் கலந்து கொண்டு போட்டியை ரசித்தார். 

 

அப்போட்டியின் போது தனது 24 காரட் தங்க ஐ போனை தொலைத்து விட்டதாக அகமதாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பான புகார் மனுவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, போனைப் பற்றி ஏதாவது தகவல் இருந்தால் உடனடியாக என்னை தொடர்பு கொண்டு உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 

 

பாலிவுட் நடிகையான ஊர்வசி ராவ்டேலா, தமிழில் சரவணா ஸ்டோர் குழுமத்தை சேர்ந்த சரவணன் நடித்த 'தி லெஜண்ட்' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.