Skip to main content

"சூர்யா சார் இந்தப் படத்தை எதுக்கு தயாரிக்கணும்?" - மேடையில் கண் கலங்கிய இயக்குனர் 

Published on 23/03/2019 | Edited on 23/03/2019

விஜயகுமார் நாயகனாக நடித்து இயக்கி, தயாரித்திருந்த 'உறியடி' படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்தது. பல நல்ல படங்களைப் போலவே வெளிவந்தபொழுது கவனிக்கப்படாமல், வெளிவந்து சில ஆண்டுகள் கழித்து இணையத்தில் பார்க்கப்பட்டு கொண்டாடப்படுகிறது இந்தப் படம். வெளியான போது விமர்சகர்களாலும், பின்னர் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான 'உறியடி-2' படத்தை நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். விஜயகுமார் இயக்கத்தில் இந்த டீமில் '96' புகழ் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இணைந்திருக்கிறார். இந்தப் படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது.
 

vijayakumar uriyadi 2



நிகழ்வில் பேசிய இயக்குனர் விஜயகுமார், நடிகர் சூர்யாவுடனான தன் அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். பேசும்பொழுது மேடையிலேயே கண் கலங்கினார்.

"சூர்யா சார் எதுக்காக இந்தப் படத்தை  தயாரிக்கணும்? பொருளாதார விஷயங்களை எதிர்பார்த்தா? கிடையவே கிடையாது. இது எல்லோருக்கும் தெரியும். மக்கள் மீதும் சினிமா மீதும் பேரன்பு கொண்ட மனிதர் சூர்யா. இந்தப் படம் மக்களுக்கான ஒரு நல்ல படமா இருக்கும் என்று நம்பித்தான் இந்தப் படத்தை சூர்யா சார் தயாரித்தார். உங்கள் நம்பிக்கையை இந்தப் படம் கண்டிப்பா காப்பாத்தும் சார். அதுக்கான உழைப்பை எல்லோரும் கொட்டியிருக்கோம்" என்று நெகிழ்வோடு சொன்னார்.

தொடர்ந்து "2D நிறுவனத்தில் ஒரு விஷயம் தேவை என்று ஒருமுறை சொல்லி ஓகே வாங்கிவிட்டால், பிறகு அதைப் பற்றி எந்தக் கேள்வியும் எப்போதும் இருந்தது இல்லை. இந்த நிறுவனத்தில் எல்லா விஷயத்துக்கும் சரியான பிளானிங் இருக்கும். படத்தோட பூஜை தொடங்கி, ஆடியோ ரிலீஸ், டீசர், ட்ரைலர், படம் ரிலீஸ் என எல்லா விஷயங்களையும் சரியா திட்டமிட்டு எந்த இடத்திலும் பிரச்சனையில்லாமல் கொண்டுபோகும் நிறுவனம் இது. எனக்கு நல்லா தெரியும். தமிழ் சினிமாவில் 200 படங்கள் வருதுன்னா, 150 படங்களில் பிரச்சனை இருக்கும். அந்த வலி..." என்றவர் குனிந்து கண்கள் கலங்கினார். ஓரிரு நொடிகளில் தன்னை தேற்றிக்கொண்டு "சாரி, இப்படிலாம் நடக்கும்னு நினைக்கல. பிரச்சனையின் வலி எனக்கு நல்லா தெரியும். ஆனா இந்தப் படத்தில் அப்படி எதுவும் இல்லாம பார்த்துகிட்ட 2D நிறுவனம் இன்னும் நிறைய படங்கள் பண்ணனும்" என்றார்.            

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஒரு நூறு புலி நகமும் இவன் மாரறைய...” - மிரட்டும் ‘கங்குவா’ படத்தின் கிளிம்ப்ஸ்

Published on 23/07/2023 | Edited on 23/07/2023

 

 Klims of 'Kangwa' released

 

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கங்குவா’. இப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

 

3டி முறையில் சரித்திரப் படமாக 10 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை, ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. அடுத்த வருடத் தொடக்கத்தில் இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கோவா, சென்னை, கொடைக்கானல் உள்ளிட்ட நகரங்களில் படப்பிடிப்பு நடந்து வந்தது. பின்பு மீண்டும் சென்னையில் படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்து வருகிறது.

 

இந்நிலையில், இப்படத்தின் கிளிம்ப்ஸ் 23 ஆம் தேதி சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்குப் பிறந்தநாள் விருந்தாக வெளியாகும் எனப் படக்குழு போஸ்டர் மூலம் தெரிவித்திருந்தது. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில் ‘கங்குவா’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது.

 

 

Next Story

'கல்விக்காக அக்கறையோடு செயல்படும் நடிகர் சூர்யாவுக்கு எனது பாராட்டு'-தமிழக முதல்வர் நெகிழ்ச்சி  

Published on 16/07/2023 | Edited on 16/07/2023

 

nn

 

சென்னையில் இன்று சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் சார்பில் பெற்றோரை இழந்த 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் சிவகுமார், கார்த்தி, சூர்யா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் நடிகர் சூர்யா பெற்றோரை இழந்த 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 25 பேரின் மேல்படிப்பிற்கு நடிகர் சூர்யா தனது அகரம் அறக்கட்டளையின் மூலம் கல்வி உதவித் தொகையை வழங்கினார்.

 

nn

 

இந்நிலையில் நடிகர் சூர்யாவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். அதில், 'ஏழை எளிய மக்களின் கல்விக்காக தொடர்ந்து அக்கறையோடு செயல்பட்டு வரும் நடிகர் சூர்யாவுக்கு எனது பாராட்டு. சட்டத் தொழிலும் மருத்துவத் தொழிலும் மற்ற தொழில்கள் போல் அல்ல. மற்றவை பணிபுரிவது இவை பயிற்சி செய்வது. ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துருவை இயக்குநராகக் கொண்ட சத்திய அகாடமியை தொடங்கி வைத்தேன். 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு இந்த அகாடமி மூலம் பயிற்சி அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன். ஜெய் பீம் படத்துக்கு பிறகு நீதியரசர் சந்துருவுடன் சமூக அக்கறையோடு செயல்பட்டு வரும் சூர்யா, ஞானவேலுக்கு எனது பாராட்டு' என தெரிவித்துள்ளார்.