இந்தியில் வெளியாகி வெற்றி பெற்றஆர்டிக்கள்15படத்தைதமிழில் நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் இயக்குநர்அருண்ராஜாகாமராஜ் இயக்கியிருந்தார். உதயநிதி நடிப்பில் சமீபத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்லவரவேற்பைபெற்றது. திரையரங்குகளிலும் வெற்றிகரமாக 50நாட்களைகடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா அண்மையில் நடைபெற்றது.
இவ்விழாவில் பேசிய உதயநிதி, "இதே மாதிரியான ஒரு மேடையில் நான் மாமன்னன்படத்திற்குபிறகுநடிக்கபோவதில்லைஎனகூறியிருந்தேன். அதுமிகப்பெரியசெய்தியாகவலைத்தளத்தில்பரவியது.நிறையபேர்கேட்டாங்கஏன் நடிப்பைநிப்பாட்டுரிங்கஎன்று கேட்டார்கள்.அதனாலஇப்போமாமன்னன் படத்திற்கு பிறகும்ஒரு படம்பண்ணலாம்னுஇருக்கேன். எனக்குதெரிஞ்சுஅந்தபடத்தைஅருண்ராஜாகாமராஜ் தான் இயக்குவார் என்றுநம்புறேன். அதற்கான பேச்சு வார்த்தையும்நடந்துட்டுஇருக்கு. அருண் உடன் பணியாற்றுவது பெரிய அனுபவமாக இருக்கிறது. இந்த படத்தில் நடிப்பது முதலில் கஷ்டமாக இருந்தது. பின்னர் அருண் இந்தபடத்திற்குகடினஉழைப்பைகொடுத்தார். அது தான் இந்த படத்தின்வெற்றிக்குகாரணம். நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் இந்தபடத்திற்காகபெரியஅர்ப்பணிப்பைக்கொடுத்துள்ளனர். தயாரிப்பாளர்போனிகபூர்மற்றும் ராகுல் தான் இந்த படம் இந்தளவு வெற்றிபெறகாரணம். நல்லபடத்திற்குபெரிய வரவேற்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. எப்பொழுதும் நல்ல படத்திற்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதனிடையே படத்தின்வெற்றியை முன்னிட்டு தயாரிப்பாளர்போனிகபூர் நடிகர்உதயநிதிக்குதங்க சங்கிலியை பரிசளித்துள்ளார்.