மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள படம் நேர்கொண்ட பார்வை. இது அமிதாப்பச்சன் நடித்த 'பிங்க்' திரைப்படத்தின் மொழிமாற்று என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் ஆகஸ்ட் 8 தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
ஆனால், இப்படத்தின் விநியோக உரிமையை யாருக்கு வழங்குவது என்று இன்னும் தயாரிப்பு தரப்பு முடிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. அஜீத் நடித்திருந்தும் இந்தப் படத்தின் வியாபாரம் தாமதமாவதற்குக் காரணம், பட நிறுவனம் சொல்லும் விலைக்கு வாங்க பெரும்பாலான விநியோகஸ்தர்கள் பயப்படுவதுதான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்தப்படத்தின் தமிழக திரையரங்க உரிமைக்காக தயாரிப்பு நிறுவனம் கேட்கும் விலை கிட்டதட்ட 60 கோடிக்கு மேல் என்று சொல்லப்படுகிறது. இதனால் பல விநியோகஸ்தர்கள் வாங்குவதற்கு தயக்கம் காட்டுகிறார்கள். அதுவும் அஜீத் அதிக நேரம் படத்தில் வரமாட்டார் என்று கூறப்படுகின்ற நிலையில், ஆழம் தெரியாமல் காலை விட வேண்டாம் என்று பெரிய தலைகள் ஒதுக்கி இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இதையும் தாண்டி காதல் மன்னனின் பெயரை கொண்ட பெரிய நிறுவனம் ஒன்று, "தயாரிப்பு தரப்பு கேட்கும் பணத்தை தருகிறோம். ஆனால், தென் இந்தியா முழுவதும் திரையிடுவதற்கான அனுமதியை தருமாறு கேட்டுள்ளனர்". ஆனால் எதையும் சேட்டை செய்யாமல் தயாரிப்பு தரப்பு உள்ளதாக கூறுகிறார்கள்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இந்நிலையில், அந்த திரைப்படத்தை வெளியிட உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் விரும்புவதாக ஒரு டாக் ஓடுகிறது. மேலும், தயாரிப்பு தரப்புடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். எனவே, நேர்கொண்ட பார்வை படத்தை யார் வெளியிட இருக்கிறார்கள் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும் என்பதே தற்போதைய கள எதார்த்தம்.