Skip to main content

‘மாமன்னன்’ சூட்டிங் குறித்து உதயநிதி ஸ்டாலின் அப்டேட்

Published on 11/11/2022 | Edited on 11/11/2022

 

Udayanidhi Stalin update on 'Mamannan suiting'!

 

நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நடித்த 'கலகத்தலைவன்' படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று (10/11/2022) சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி, இயக்குநர்கள் மிஷ்கின், மாரிசெல்வராஜ், பிரதீப், சுந்தர்.சி, நடிகர்கள் அருண் விஜய், விஷ்ணு விஷால் மற்றும் புரொடியூசர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

 

விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "கலகத்தலைவன் படக்குழுவினருக்கும், என்னுடைய சக நடிகர்கள் அத்தனை பேருக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும், என்னுடைய நற்பணி மன்றத்தைச் சார்ந்த தம்பிகளுக்கும் நன்றி. அருண் விஜய் சொன்னாருல. அவரு படத்தை எடுத்து முடிச்சிருவாரு. அப்புறம் போஸ்ட் புரொடக்ஷன்ல ரொம்ப டைம் எடுத்துக்குவாருனு. அது ரொம்ப டைம் இல்ல. ரொம்ப ரொம்ப டைம். எவ்வளவு டைம்னா, நாங்க இப்படி ஒரு படம் எடுத்ததே மறந்துட்டோம். சூட்டிங் முடிச்சிட்டேன். இந்தப் படம் முடிச்சிட்டு தான் நெஞ்சுக்கு நீதி போனேன். 

 

நெஞ்சுக்கு நீதி போய் முடிச்சிட்டு, அது ரிலீஸ் ஆகி, அப்புறம் திருப்பி இந்த படத்திற்கு கூப்புட்டாங்க. ஓ, இப்படி ஒரு படம் பண்ணிட்டு இருந்தோம்ல. அப்படினு சொல்லி, திருப்பி பர்ஸ்ட்ல இருந்து கதையெல்லாம் கேட்டுட்டு, மறுபடியும் நடிச்சேன். 70 நாள் எடுத்தாரு. ஆனால், மூணு வருஷம் ஆச்சு. பூஜை போட்டு 2019-ல ஆரம்பிச்சேன். ஒவ்வொரு ஷாட்டா செதுக்கி வச்சிருக்காரு. ஒரு சின்ன சீன ஃபுல் டே எடுப்பாரு. நாம கூட முடிஞ்சிருச்சு போல இருக்கு, அடுத்த சீனுக்கு போயிடுவாறு போலனு பாத்தா அது டே புல்லா போகும். அதுக்கு அப்புறம் இன்னொரு படத்துக்கு போனேன். மாமன்னன். இவரு 70 நாள் வச்சி செஞ்சாரு. அவரு 120 நாளு. இன்னும் முடிக்கல. இப்ப கேட்டிங்கல, அப்டேட் வேணும்னு. மாமன்னன் சூட்டிங் முடில. இதுதான் அப்டேட்டு. 

 

நான் முடிஞ்சிருச்சினு நினைச்சிட்டு இருந்தேன். எப்ப பாத்தாலும் ஒரு இரண்டு நாள் வரிங்களா, போய் எடுத்துட்டு வந்துடுவோம். மாசம் மாசம் இரண்டு நாள், மூணு நாள் அப்படியே எடுத்துட்டே இருக்கோம். என் மேல அவ்வளோ பாசம் மாரி செல்வராஜ் சாருக்கு. அருண் தான் பயங்கர காம்பெக்ட்டான ஆளு. 40 நாள்லயே முடிச்சிவிட்டாரு நெஞ்சுக்கு நீதி. பாவம் நிதி அகர்வால் தான் திருப்பி தமிழ்ல நடிப்பாங்களானு தெரியல. பைட் சீன்ஸ்ல என்னை விட அவங்க தான் அதிகமாக அடி வாங்கறது, குத்து வாங்கறது, ஒத வாங்கறது எல்லாமே. 

 

கேமராமேன் சார், நீங்க பேர் மாத்தினதே எனக்கு தெரியாது. செந்தில்ன்னு நினைச்சிட்டு இருந்தன் உங்க பேரு. அப்ப தான் தில் ராஜ்-ன்னாங்க. ரொம்ப தில் வேணும் சார் அவரோட சேர்ந்து படம் பண்ணணும்னா. இங்க இருக்கக் கூடிய அனைத்து இயக்குநர்கள் கூடயும் நான் வேலை பாத்துட்டேன். சுந்தர்.சி சார் மட்டும் தான் மிஸ் ஆகிடுச்சி. 'தீயா வேலை செய்யணும் குமாரு' படம், நான் பண்ண வேண்டிய படம். ஓரளவு நல்லா பண்ணிருக்கோம். மகிழோட படங்கள் எப்படினு உங்களுக்குத் தெரியும். ஒரு பரபரப்பு இருக்கும் திரைக்கதையில. எல்லா கதாப்பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும். நவம்பர் 18 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகுது. நெஞ்சுக்கு நீதி மாதிரி, இந்த படமும் வெற்றிப் பெறணும்னு. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. 

 

என்னமோ, தமிழ் சினிமாவ நான் தாங்கிப் பிடிச்சிட்டு இருக்கிற மாதிரி, நடிக்கறத நிப்பாட்டாதீங்க, நடிக்கறத நிப்பாட்டாதீங்கன்னா, நான் இன்னும் நடிக்கவே ஆரம்பிக்கல. மாரி சார கேளுங்க தெரியும். மாமன்னன் சூட்டிங் ஸ்டார்ட் ஆகிடுச்சு. எட்டு நாள் சூட் முடிஞ்சிருச்சு. நான் போய் மாரி சார்ட்ட கேட்டேன். என்ன சார் எதுமே சொல்ல மாட்டிக்கிறீங்க. நீங்க நினைக்கிற மாதிரி நான் எதாவது பண்றேனா. நடிக்கறேனானு. தெரில சார், நான் ஒரு 10 நாள் கழிச்சி சொல்றேன்னு சொன்னாரு. நீங்கெல்லாம் வந்து சுருக்கமா பேசி, இந்த புரோகிராம இவ்வளவு சிம்பிளா, சீக்கிரமா முடியதறதுக்கு உதவி பண்ண உங்க அத்தனை பேருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவிச்சிக்கிறன்." இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். 

  

சார்ந்த செய்திகள்

Next Story

“கடன் வாங்கி கதை சொல்ல முடியாது” - மாரி செல்வராஜ் ஆதங்கம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
mari selvaraj about maamannan in pk rosy film festival

நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ‘ரோஸி திரைப்பட விழா’ கடந்த  8ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றுடன் நிறைவடையும் இந்த விழாவில் இன்று மாமன்னன் திரைப்படம் திரையிடப்பட்டது. பின்பு படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் ரசிகர்களுடன் உரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.  

அப்போது, மாமன்னன் படம் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார் மாரி செல்வராஜ். அதன் ஒரு பகுதியில், “மாமன்னன் படம் ஒரு சாதாரண சம்பவம். எங்க அப்பா ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். நான் சேரில் உட்காந்திருக்கேன். அவர் உட்காரவில்லை. அன்னைக்கு எங்க அப்பா உட்பட யாருமே ஃபீல் பண்ணவில்லை. ஆனால் எனக்கு அவர் உட்காரவில்லை என தோன்றியது. ஏன் என கேட்டபோது நாங்க உட்காரமாட்டோம் என்றார். சின்ன வயதில் நானே நிறைய பார்த்திருக்கிறேன். ஆனால் இன்றைக்கு பார்க்கும் போது அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் அது ஒரு கதையாக மாறுகிறது. இன்றைக்கு பரியேறும் பெருமாள் பண்ணிட்டு போனபோது கூட, எங்க அப்பா அப்படித்தான் நின்னுகிட்டு இருந்தார். 

என்னுடைய படைப்பு 10 வருடம் கழித்து கேள்விக்கு உட்படுத்தப்படலாம். எனக்கு இன்றைக்கு உள்ள வலி, அதை வெளியேற்ற வேண்டும் அவ்வளவுதான். ஒரு படைப்பாளியாக ஒரு சுமையை இறக்குகிறேன். எனக்கு விடுபடுவதற்கான வழி தான் இந்த சினிமா. என்னுடைய படைப்பு எதுவாக மாறும் என்பது தெரியாது. எனக்குள் இருக்கும் கோவத்தை மட்டும் கலையாக மாற்றுவதற்கு நான் விரும்பவில்லை. என் வாழ்க்கையை கலையாக மாற்றுவது ரொம்ப ஈஸி. என் வாழ்க்கையில் ஒரு அறம் இருக்கிறது என நம்புவது, அந்த அறத்தை படம் பிடித்துக் காட்டுவது, அதன் மூலம் மனிதத் தன்மையை கேள்விக்குட்படுத்துவது. இதைத்தான் என்னால் பண்ண முடியும். அது ஏற்றுக் கொள்ளப்படுகிறதா? இல்லையா? என்பது பற்றி எனக்கு கவலை கிடையாது.      

நமக்கு முன்னாடி ஒடுக்கப்பட்டோரின் வாழ்க்கையைத்தான் படம் எடுத்துட்டு இருக்கிறோம். தமிழ்நாட்டில் ஒரு 10 பேர் முக்கிய ஆளுமைகளாக பேசிக்கொண்டு வருகிறோம். தனக்கு நடந்ததை எல்லாம் சொல்ல முடியாமல் நசுங்கி இறந்து போனவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள். அவர்கள் வாழ்கையும் கதைதான். 10 பேரோட வெற்றிக்கதையை சொல்வது மட்டும் என்னுடைய வேலை கிடையாது. நசுங்கி, பிசுங்கி காணாமல் போனவர்களின் கதையைத் தோண்டி எடுத்து, அவர்கள் யாரால் நசுக்கப்பட்டார்கள் என்ற கேள்வி எனக்குள் இருக்கிறது. ஏன் நசுக்கப்பட்டோம், பிதுக்கப்பட்டோம் என சொல்லிக்கொண்டே இருக்கீங்க என கேட்பார்கள். வேறு வழி இல்லை. என்னுடைய கதையைச் சொல்லும் போது அப்படித்தான் சொல்ல முடியும். நான் இன்னொருத்தன் கதையை கடன் வாங்கி சொல்ல முடியாது. அந்தக் கதைக்குள் ஒரு முரண்பாடு இருந்தது என்றால், அதற்கு நான் ஒன்னும் செய்ய முடியாது. மறுபடி மறுபடி எனக்கு அப்படிப்பட்ட வாழ்க்கைதான் கொடுக்கப்பட்டது. அந்தக் கேள்விகளை நான் கேட்டுக்கொண்டுதான் இருப்பேன்” என ஆதங்கம் நிறைந்து பேசினார்.

Next Story

பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் வெளியிட்ட வெற்றிமாறன் வெளியிடும் பட அப்டேட்

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
vetrimaaran presents vemal starring bose venkat directing ma.po.si movie first look released

சின்னத்திரையில் அறிமுகமாகி, அதற்கு பிறகு பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் போஸ் வெங்கட். இவர் 'கன்னி மாடம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு சில சர்வதேச திரைப்பட விழாவிலும் விருதுகளை கைப்பற்றியது. 

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக சிராஜ் தயாரிப்பில் ஒரு படம் இயக்குகிறார். 'மா.பொ.சி' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் விமல் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் கன்னி மாடம் படத்தில் நடித்த ஸ்ரீ ராம் கார்த்திக், சாயா தேவி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். சித்து குமார் இசைப்பணிகளை மேற்கொள்கிறார். 

vetrimaaran presents vemal starring bose venkat directing ma.po.si movie first look released

இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி வெளியிடுவதாக கடந்த 1ஆம் தேதி அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இப்போஸ்டரை சிவராஜ்குமார், விஜய் சேதுபதி, பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், சமுத்திரக்னி, லால் உள்ளிட்டோர் அவரகளது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். 

வாத்தியார் கெட்டப்பில் விமல் நடித்துள்ளார். பள்ளிக்கூடத்தில் கல்வியை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. மேலும் போஸ்டரில் விமல் முகத்தில் ரத்தக் கறையுடன் கையில் சாக்பீஸ் உடன் இடம் பெறுகிறார். இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.