Skip to main content

"படம் நடப்பதற்கு உதய் எவ்வளவு பெரிய காரணமோ, அவ்வளவு பெரிய..." - இயக்குநர் மகிழ் திருமேனி பேச்சு

Published on 11/11/2022 | Edited on 11/11/2022

 

"Uday is as big a reason for the film to happen, as big as it is..." - director Mizhy Thirumeni speech!

 

நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நடித்த 'கலகத்தலைவன்' படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று (10/11/2022) சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர்கள் மிஷ்கின், மாரிசெல்வராஜ், பிரதீப், சுந்தர்.சி, நடிகர்கள் அருண் விஜய், விஷ்ணு விஷால் மற்றும் புரொடியூசர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

 

விழாவில் பேசிய இயக்குநர் மகிழ் திருமேனி, "இன்றைக்கு இந்த மேடையில் நிற்கும் பொழுது, ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு முன், ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்காக படம் பண்ணக் கூடிய வாய்ப்பு என்றைக்கு வரும் என்று நான் நினைத்து ஏங்கிய அந்த தருணம் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. இதற்கு நான் இரண்டு பேருக்கு நன்றி சொல்ல வேண்டும். முதலாமவரைப் பற்றி இறுதியாகப் பேசுகிறேன். இரண்டாமவரைப் பற்றி முதலில் ஓரிரு வார்த்தைகளைக் கூற ஆசைப்படுகிறேன். சில மணித் துளிகள் எடுத்துக் கொள்ள ஆசைப்படுகிறேன். 

 

என்னைப் பொறுத்தவரை இது ஒரு நன்றி அறிவிப்பு மேடை. நான் பல பேருக்கு நன்றி சொல்ல வேண்டியிருக்கிறது. செண்பகமூர்த்தி சார் ஒரு படத்தின் மேடையேறி இதுதான் நான் முதல் முறை பார்க்கிறேன். இந்தப் படம் நடப்பதற்கு உதய் எவ்வளவு பெரிய காரணமோ, அவ்வளவு பெரிய காரணம் செண்பகமூர்த்தி சார். அன்றைக்கு அந்தப் படம் ஆரம்பித்த தருணத்தில் இருந்து இன்று வரை எவ்வளவு பெரிய உறுதுணையாக, எவ்வளவு பெரிய பக்கபலமாக, காவல் சாமியாக இருக்கிறார் என்று எனக்கு மட்டுமே தெரியும். 

 

பார்ப்பதற்கு மிகவும் கரடுமுரடானவர். ஆனால், மதுரை மண்ணுக்கே உரிய வெள்ளந்தி குணம், குழந்தை தனம் நிறைந்தவர். அவரோடு நான் நிறைய சண்டையிட்டுருக்கிறேன். கோபித்துக் கொண்டிருக்கிறேன். அவரோடு பேசாமல் இருந்திருக்கிறேன். இது எல்லாவற்றிற்கும் அவர் இடம் கொடுத்திருக்கிறார். இன்று வரை எனக்கு உடன்பிறவாச் சகோதரராக இருக்கிறார். அவருக்கு எனது நன்றி. அடுத்ததாக அர்ஜுன். வெரி டேலண்டட், எண்டர்பிரைசிங் யங் மேன். இந்த படத்தின் இணைத் தயாரிப்பாளர். முதல் நாள் பூஜையின் போது பார்த்தது. அதற்குப் பிறகு இப்பொழுது தான் பார்க்கிறேன். 

 

இந்த விழாவின் நாயகர்கள் கார்க்கி, பிரியன், ஏக்நாத் மற்றும் ஸ்ரீகாந்த் தேவா. இவர்கள் எல்லோரைப் பற்றியும் ஓரிரு வார்த்தைகள் பேச ஆசைப்படுகிறேன். நான் என்னைப் பற்றி பேசப் போவதில்லை. படத்தைப் பற்றியும் பேசப் போவது இல்லை. ஆனால், இவர்கள் யாருமின்றி படம் இல்லை என்பதனால் பேச வேண்டிய கடமைப்பாடு எனக்கு இருக்கிறது. கார்க்கி என்னுடைய நண்பன். கார்க்கி கூட ஒரு படம் கூட பண்ணது இல்லை. பண்ணப் போவதும் இல்லை. அவர் தன்னை ஒரு கவிஞர் என்று அழைத்துக் கொள்வதே இல்லை. பாடலாசிரியர் என்று மட்டுமே சுருக்கிக் கொள்வார். ஆனால், அவருடைய ஒவ்வொரு பாடலும், ஒரு கவிதையாகவே இருக்கிறது. அதை நாம் படிக்கலாம். ஒரு கவிதை என்ன வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்குமோ, அதே மாதிரி அவருடைய திரைப்பட பாடல்கள், அதே வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கக் கூடியவை. அவர் எழுதக் கூடிய எந்தப் பாடலாக இருந்தாலும், அதில் ஒரு வரியைக் கூட மாற்ற முடியாது; மாற்றினால் அர்த்தம் மாறிவிடும்.  

 

எனக்கு இன்றும் நன்றாக நியாபகம் இருக்கிறது. அவர் சொன்ன அந்த நிகழ்ச்சி. அவரது முதல் படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வருகிறேன். என்னுடைய கைகள் உதறிக் கொண்டே இருக்கின்றன. தமிழ் சினிமா தோன்றிய காலத்தில் இருந்து சொல்கிறேன். 50 படங்களை நாம் வரிசைப்படுத்தினால், மாரி செல்வராஜ் உடைய பரியேறும் பெருமாள், படத்தின் ஓப்பனிங் சீன்ஸ் அதில் நிச்சயம் இடம்பெறும். அமைதியானவர்களிடம் இருந்து தான் மிக ஆழமான திரைப்படங்கள் பிறக்கின்றன. அதற்கு அருண்ராஜா காமராஜ் சிறந்த உதாரணம்." என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"ரொம்ப எமோஷனலான மொமெண்ட் இது" - அபர்ணா தாஸ்

Published on 07/02/2023 | Edited on 07/02/2023

 

aparna das speech at kavin dada trailer launch event

 

அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டாடா'. கவினுக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த அபர்ணா தாஸ் நடிக்கிறார். 'முதல் நீ முடிவும் நீ' புகழ் ஹரிஷ், ‘வாழ்’ புகழ் பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் மூன்று பாடல்கள் மற்றும் டீசர் முன்னதாக வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. 

 

இப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வரும் 10ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தமிழகத்தில் வெளியிடுகிறது. இதையொட்டி இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. 

 

கதாநாயகி அபர்ணாதாஸ் பேசுகையில், “கதாநாயகியாக நான் நடித்த முதல் தமிழ் படம் இது என்பதால் எனக்கு எமோஷனலாக இருக்கிறது. கேரளாவுக்கு வந்து கதை சொன்னதில் இருந்து படம் முடியும் வரை எனக்கு உறுதுணையாக நின்ற என் இயக்குநர் கணேஷூக்கு நன்றி. என்னை இயக்குநரிடம் அறிமுகப்படுத்தியது கவின்தான். கவின் இல்லை என்றால் இந்தப் படத்தில் நான் இல்லை. தமிழ் சினிமாவில் இது என் சிறந்த தொடக்கமாக இருக்கும்” என்றார்.  

 

நடிகர் கவின் பேசுகையில், ”நான்கு வருடங்களாக ‘டாடா’ படத்திற்காக நாங்கள் திட்டமிட்டோம். இத்தனை வருடங்களும் நாங்கள் இந்தப் படம் சிறப்பாக வரவேண்டும் என்றுதான் உழைத்தோம். பிரதீப், பாலு நாங்கள் அனைவருமே கல்லூரி காலத்தில் இருந்தே நண்பர்கள். என் மேல் அவர் வைத்திருந்த நம்பிக்கைதான் இவ்வளவு தூரம் படத்தைக் கொண்டு வந்துள்ளது. எனக்குத் தெரிந்த பாபு இவ்வளவு மெச்சூர்டான கண்டெண்ட் யோசிப்பானா என்பது தெரியாது. ரெட் ஜெயண்ட் மூவீஸ் இந்தப் படத்தை ஒத்துக் கொண்டதற்கு நன்றி" என்றார். 

 

 

Next Story

இசை வெளியீட்டு விழாவில் பாக்யராஜ் சொன்ன குட்டிக்கதை

Published on 09/01/2023 | Edited on 09/01/2023

 

 A short story told by Bhagyaraj at the audio launch event

 

பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ் - அல் முராட் & சக்தி வேல் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் 'லாக்'. இப்படத்தை ரத்தன் லிங்கா எழுதி இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே சில குறும்படங்களை இயக்கியவர். 'அட்டு' என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் வடசென்னை வாழ்வியலை பதிவு செய்தவர் என்ற முத்திரை பதித்தவர். 'லாக்' படத்தின் இசை வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

 

இந்நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது வாழ்வில் பிரச்சனைகள் வருவது பற்றி ஒரு குட்டிக் கதையும் சொன்னார். இயக்குநர் கே.பாக்யராஜ் பேசியதில், “படத்தின் இயக்குநர் ரத்தன் லிங்கா பேசும்போது பல்வேறு சிரமங்கள், இடைஞ்சல்களைச் சந்தித்துத்தான் இந்தப் படம் உருவானது என்றார். நல்லது நடக்கும் போது இது மாதிரி இடையூறுகள் வந்துகொண்டு தான் இருக்கும். அதையும் தாண்டித்தான் வர வேண்டும். எவ்வளவு முயன்றாலும் வரவேண்டிய இடையூறுகள் வந்தே தீரும். எனக்கு இப்போது ஒரு கதை ஞாபகம் வருகிறது. 

 

மூன்று திருடர்கள் தினமும் விநாயகரை வேண்டிவிட்டு திருடப் போவார்கள். ஒன்றும் கிடைக்காவிட்டால் வந்து சண்டை போடுவார்கள். அப்படிப் பலநாள் எதுவும் கிடைக்கவில்லை. அன்று வேண்டும்போது, இன்று மட்டும் எதுவும் கிடைக்காவிட்டால் எங்களுக்கு கெட்ட கோபம் வரும் என்று எச்சரித்துவிட்டு திருடச் சென்றார்கள். அன்றும் ஒன்றுமே கிடைக்காதுபோகவே, ஒவ்வொருவராக விநாயகர் கோவிலுக்குள் கல் வீசினார்கள். ஆனால், மூன்றாவது திருடன் மட்டும் கொஞ்சம் தயங்கினான். விநாயகர் தண்டித்துவிட்டால் என்ன செய்வது? என்று பயந்து அந்தக் கல்லைத் தூக்கிக் கோயிலுக்கு வெளியே உயரமாக இருந்த மரத்தின் மீது வீசினான்.

 

அதே நேரத்தில் கண் வலித்தது. என்ன என்று பார்த்தால் எதிரே விநாயகர் நின்றார். தலையில் ரத்தத்தோடு. நான் எதுவுமே செய்யவில்லையே! நான் கல்லை கோயிலைத் தாண்டித்தானே வீசினேன்! என்றான். எனக்கு ஏன் இப்படி ஒரு தண்டனை கொடுத்தாய் விநாயகா? என்றான். அதற்கு விநாயகர், நீங்கள் இப்படி செய்வீர்கள் என்றுதான் நான் தான் மரத்தின் மீது ஏறி ஒளிந்து கொண்டு உட்கார்ந்திருந்தேன் என்றார். அதுபோல இடையூறுகள் எப்படியென்றாலும் வாழ்வில் வந்தே தீரும்.” என்று கூறினார்.