Skip to main content

தமிழ் சினிமாவுக்கு வந்த 2 சூப்பர் ஸ்டார்கள்!

Published on 01/02/2019 | Edited on 01/02/2019
vidya balan

தமிழ் திரையுலகில் நயன்தாரா, காஜல், சமந்தா, கீர்த்தி சுரேஷ், ரகுல் ப்ரீத்தி சிங் ஆகியோர் கடந்த ஆண்டு ஆதிக்கம் செலுத்தினார். இந்த ஆண்டு இவர்களுக்கு படங்கள் வாய்ப்பு குறைந்துள்ளன. ஆனால், நயன்தாராதான் நம்பர்-1 இடத்தை தக்க வைத்துகொண்டு இருக்கிறார். பெண் சூப்பர் ஸ்டார் என்றே நயனை அழைக்கிறார்கள். பெண் நடிகைகளில் அதிக சம்பளம் பெரும் நடிகை, பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிப்பது போன்று தனித்துவமாக செயல்படுகிறார்.
 

இந்நிலையில்,  மற்ற மொழிகளிலும் நயனை போன்று, ஏன் நயனுக்கே முன்னோடி பெண் சூப்பர் ஸ்டார்களாக இருந்த இரு பெண் நட்சத்திரங்கள் தமிழ் சினிமாவில் இந்த வருடம் அறிமுகம் ஆகிறார்கள். மஞ்சு வாரியர், மலையாள சினிமாவின் பெண் சூப்பர் ஸ்டார். இவருடைய படங்களுக்கு என்று தனி மாஸ் உண்டு, ரசிகர்கள் உண்டு. இவர் நடித்த படத்தின் கலெக்‌ஷன்களும் எகிரும் அளவிற்கு மலையாளத்தில் இருப்பவர் வெற்றிமாறன் இயக்கும் அசூரன் தமிழ் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
 

சில்க் ஸ்மிதா வாழ்க்கையை படமாக ஹிந்தியில் டர்டி பிக்ச்சர் என்று எடுத்தனர். அதில் சில்க் வேடத்தில் நடித்தது வித்யா பாலன். வித்யா பாலன் ஹிந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றே சொல்லலாம். நடிப்பிற்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்கும் நடிகைகளில் மிகவும் முக்கியமானவர். கஹாணி, துமாரி சுலூ ஆகிய படங்களில் இவருடைய பெர்ஃபார்மன்ஸ் வேர லெவல். தற்போது இவர் அஜித்துக்கு ஜோடியாக பிங்க் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கமலுக்கு ஜோடியாகும் அஜித் படத்தில் என்ட்ரி கொடுத்த முன்னணி இந்தி ஹீரோயின்?

Published on 29/04/2023 | Edited on 29/04/2023

 

vidya balan to pair kamalhaasan 234 novie

 

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தை முடித்துவிட்டு மணிரத்னம், மகேஷ் நாராயணன், பா.ரஞ்சித் உள்ளிட்ட இயக்குநர்களுடன் பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளார். இதனிடையே அ.வினோத் அல்லது வெற்றிமாறனுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. 

 

இந்த நிலையில் மணிரத்னத்துடன் கூட்டணி அமைக்கவுள்ள படம் கமலின் 234வது படமாக உருவாகவுள்ளது. 35 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னத்துடன் கமல் கூட்டணி அமைத்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தை கமல்ஹாசனும் உதயநிதி ஸ்டாலினும் இணைந்து வழங்க 'ராஜ் கமல்' மற்றும் 'மெட்ராஸ் டாக்கீஸ்' தயாரிக்கின்றனர். இசைப்பணிகளை ஏ.ஆர்.ரஹ்மான் மேற்கொள்கிறார். 

 

இப்படத்தில் த்ரிஷாவை கதாநாயகியாக நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக முன்பு தகவல் வெளியானது. இதையடுத்து நயன்தாராவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இப்படம் மூலம் அவர் முதல் முறையாக கமலுடன் ஜோடி போடவுள்ளதாகவும் கூறப்பட்டது. 

 

இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் லேட்டஸ்ட் தகவலின் படி பிரபல இந்தி நடிகை வித்யாபாலன் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாகப் பேசப்படுகிறது. பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருக்கும் வித்யாபாலன் தமிழில் அஜித் நடிப்பில் வெளியான 'நேர்கொண்ட பார்வை' படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருப்பார். இப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகவல் உறுதியாகும் பட்சத்தில் இரண்டாவது முறையாக அவர் தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார். மேலும், முதல் முறையாக கமலுடன் இணைந்து நடிக்கவுள்ளார். 

 

 

Next Story

"எனக்கு அப்படி எந்த ஒரு நோக்கமும் கிடையாது" - வித்யா பாலன் திட்டவட்டம்!

Published on 14/08/2020 | Edited on 14/08/2020
fsaf

 

 

மனித கணினி என்று அழைக்கப்படும் சகுந்தலா தேவி வாழ்க்கையை மையமாக வைத்து வித்யா பாலன் நடிப்பில் உருவாகியுள்ள 'சகுந்தலா தேவி' திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது. ரசிகர்களிடையே இப்படம் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தான் திரைத்துறையில் எடுக்கும் முக்கிய முடிவுகள் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில்...

 

"நான் சில ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து என் மனம் சொல்வதை கேட்டுப் பின்பற்ற ஆரம்பித்தேன். அது முடிவெடுக்க எனக்கு எளிதாக இருந்தது. நான் என்னை எந்த விதத்திலும் புரட்சி முடிவு எடுப்பவளாக பார்க்கவில்லை. தங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறதோ அதை செய்யாமல் தங்களுக்கு பிடித்ததை செய்யும் போது அவர்கள் புரட்சி முடிவு எடுப்பதாக கூறுகிறோம் என நினைக்கிறேன். எனக்கு அப்படி எந்த ஒரு புரட்சி நோக்கமும் கிடையாது. எனக்கு பிடித்ததை செய்தேன்" என கூறியுள்ளார்.