தமிழ் சினிமாவில்இசையமைப்பாளராகஅறிமுகமான ஆதி, ‘மீசைய முறுக்கு’, ‘நட்பே துணை’, ‘நான் சிரித்தால்’ சிவகுமாரின்சபதம், அன்பறிவு ஆகிய படங்களில் நடித்துப் பிரபலமானார். இவர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூர் இல்லத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் ஹிப் ஹாப் ஆதி வீட்டில் மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். பனையூரில் உள்ள ஆதியின் வீட்டில் நேற்று மர்ம நபர்கள் குடிபோதையில் கற்களை வீசியுள்ளனர். இதனால் வீட்டின் கதவு சேதமடைந்துள்ளது. இதனைப்பார்த்தஅக்கம்பக்கத்தினர் காவல்துறைக்குதகவல் கொடுத்தனர். அதன் பின் அங்கு வந்த கானத்தூர் போலீசாரைபார்த்த மர்ம நபர்கள் காரில் தப்பித்துஒட்டியுள்ளனர்.
இதையடுத்து சிசிடிவியின் உதவியின் மூலம் விசாரணை நடத்தி வந்த போலீசார் காரின்உரிமையாளர் அஜய் வாண்டையாரிடம் விசாரணை நடத்தினர். அதில் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர் வடபழனியைசேர்த்த பிரேம் குமார் என்றும் மற்றொரு நபர் மதுரை சேர்ந்த அர்ஜுன் என்பது தெரியவந்தது. இதனையடுத்துஇருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறது.