Skip to main content

ஹிப் ஹாப் ஆதி வீட்டில் கல் வீச்சு

Published on 27/04/2022 | Edited on 27/04/2022

 

someone attacking hiphop tamizha adhi house

 

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான ஆதி, ‘மீசைய முறுக்கு’, ‘நட்பே துணை’, ‘நான் சிரித்தால்’ சிவகுமாரின் சபதம், அன்பறிவு ஆகிய படங்களில் நடித்துப் பிரபலமானார். இவர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூர் இல்லத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 

 

இந்நிலையில் ஹிப் ஹாப் ஆதி வீட்டில் மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். பனையூரில் உள்ள ஆதியின் வீட்டில் நேற்று மர்ம நபர்கள் குடிபோதையில் கற்களை வீசியுள்ளனர். இதனால் வீட்டின் கதவு சேதமடைந்துள்ளது. இதனைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன் பின் அங்கு வந்த கானத்தூர் போலீசாரை பார்த்த மர்ம நபர்கள் காரில் தப்பித்து ஒட்டியுள்ளனர். 

 

இதையடுத்து சிசிடிவியின் உதவியின் மூலம் விசாரணை நடத்தி வந்த போலீசார் காரின் உரிமையாளர் அஜய் வாண்டையாரிடம் விசாரணை நடத்தினர். அதில் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர் வடபழனியை சேர்த்த பிரேம் குமார் என்றும் மற்றொரு நபர் மதுரை சேர்ந்த  அர்ஜுன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாமியாரை துடிதுடிக்க கொன்ற மருமகன்; சென்னையில் பயங்கரம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Son-in-law incident mother-in-law in Chennai

சென்னை மாதவரம் கண்ணன் நகரில் வசித்து வருபவர்கள் புஷ்பராஜ் - ஜான்சி தம்பதியினர் புஷ்பராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மனைவி ஜான்சி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடன் ஜான்சியின் தாய் வசந்தியும் வசித்து வந்துள்ளார். புஷ்பராஜ் தினமும் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புஷ்பராஜ் மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி ஜான்சியுடன் வாக்குவாம் ஏற்பட்டுள்ளது. மாமியார் வசந்தி தங்களுடன் வசித்து வருத்து வருவதால்தான் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கருதிய புஷ்பராஜ் மனைவி வெளியே சென்ற போது மாமியார் வசந்தியிடம் இதுகுறித்து தகராறு செய்துள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த புஷ்பராஜ் மாமியார் வசந்தியை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதையடுத்து புஷ்பராஜ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வசந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த  புஷ்பராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

ஆட்டோ ஓட்டுநரால் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
Auto driver arrested under POCSO Act for misbehaving with girl

சேந்தமங்கலம் அருகே உள்ள துத்திக்குளம் தொட்டிப்பெட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய  மகன் ஆட்டோ ஓட்டுநர் ரஞ்சித் (27).  இவர் அதே பகுதியைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது  சிறுமியை ஆசை வார்த்தை கூறி, வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.   

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம்  தெரிவித்துள்ளார். சிறுமியின் பெற்றோர்கள்  கொடுத்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் கோவிந்தராஜன் ஆட்டோ ஓட்டுநர் ரஞ்சித்தை போக்சோ  சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகிறார்.