சவரகத்தி வெற்றிக்கு பிறகு தற்போது சூப்பர் டீலக்ஸ், சுட்டுப்பிடிக்க உத்தரவு ஆகிய படங்களில் நடித்து வரும் மிஷ்கின் தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். சாந்தனு பாக்யராஜ் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பி.சி.ஸ்ரீராம் பணியாற்ற இருக்கிறார். மேலும் நளனும் நந்தினியும், சுட்ட கதை, மற்றும் விரைவில் வெளியாகவுள்ள நட்புனா என்னனு தெரியுமா உள்ளிட்ட படங்களைத் தயாரித்த லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது என்று படக்குழு அதிகார்பூர்வமாக டுவிட்டரில் அறிவித்தது. இந்நிலையில் தற்போது நாயகியாக நடிக்க சாய் பல்லவி மற்றும் நித்யா மேனன் நடிக்கவுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரட்டை கதாநாயகிகள், ஆஸ்கார் நாயகன் என புதிய பட அறிவிப்பில் கலக்கும் மிஷ்கின் !
சார்ந்த செய்திகள்
Next Story
சாந்தனுவுக்கு இது புதிய பிறப்பாம்...
விஷால் நடித்த துப்பறிவாளன் படத்திற்கு பிறகு இயக்குனர் மிஷ்கின் கதை, திரைக்கதை எழுதி நடித்த படம் சவரக்கத்தி. இதையடுத்து அவர் தற்போது சுட்டுப்பிடிக்க உத்தரவு படத்தில் நடித்து வருகிறார். இதனால் சில நாட்களாக இயக்குனர் பணியில் இருந்து சற்று ஒதுங்கியிருந்த மிஷ்கின் தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்க சாந்தனு பாக்யராஜ் ஒப்பந்தமாகியுள்ளார். மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் படத்தில் பாக்யராஜ் நடித்திருந்தார். ஒளிப்பதிவாளராக பி.சி.ஸ்ரீராம் பணியாற்ற இருக்கிறார். நளனும் நந்தினியும், சுட்ட கதை, மற்றும் விரைவில் வெளியாகவுள்ள நட்புனா என்னனு தெரியுமா உள்ளிட்ட படங்களைத் தயாரித்த லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது என்று படக்குழு அதிகார்பூர்வமாக டுவிட்டரில் அறிவித்தது. இந்தப் படத்தைப் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட சாந்தனு, "இது எனது புதிய பிறவி" என்று குறிப்பிட்டு மகிழ்ந்திருந்தார்.