அண்மையில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்ட செய்தியிலிருந்தே பலரும் மீளாமல் இருக்கின்றனர்.
இந்நிலையில் பிரபல டிவி சீரியல் நடிகர் சமீர் ஷர்மா தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மலாட் வெஸ்ட்டிலுள்ள அவரது வீட்டின் சமையல் அறையில் தூக்கிட்ட நிலையில் நேற்று இரவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
அவருடைய உடல் பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை விசாரித்து வரும் மலாட் போலீஸார், சமீர் ஷர்மா இறந்து இரண்டு நாட்களாகியிருக்கலாம் என்று சந்தேகப்படுகின்றனர்.