"கரோனா தடுப்பூசிக்கு நன்றி, விரைவில் மீண்டு வருவேன்..."- நடிகை த்ரிஷா ட்வீட்

trisha tested positive covid19

இந்தியாவில் குறைந்து வந்த கரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நபர்கள் மற்றும் திரை பிரபலங்களுக்குகரோனாதொற்று ஏற்படுகிறது.

அந்தவகையில்தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் த்ரிஷாவுக்கு கரோனாதொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாதுகாப்பாக இருந்தபோதிலும், புத்தாண்டிற்கு முன்பேஎனக்கு கரோனாஇருப்பது உறுதி செய்யப்பட்டது. நான் தற்போது குணமடைந்து நன்றாக இருப்பதாக உணர்கிறேன். தடுப்பூசி எடுத்துக்கொண்டதால்அதிக பாதிப்பு ஏற்படவில்லை, அதற்காகதடுப்பூசிக்கு நன்றி கூறுகிறேன். நீங்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள். விரைவில் கரோனாவில் இருந்து முழுவதும் குணமடைந்து வீடு திரும்புவேன் என்ற நம்பிக்கை உள்ளது. என் மீது அக்கறை கொண்ட நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் எனத் தெரிவித்துள்ளார்.

covid 19 trisha
இதையும் படியுங்கள்
Subscribe