இந்தியாவில் குறைந்து வந்த கரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இருப்பினும் நாளுக்குநாள் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனிடையே திரை பிரபலங்களுக்கு அதிகளவில் கரோனாபாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
அந்தவகையில்நடிகை த்ரிஷாவுக்குசமீபத்தில் கரோனாஉறுதி செய்யப்பட்டதை அடுத்து தனிமை படுத்திகொண்டுசிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் தற்போது குணமடைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்," இதுவரைநெகட்டிவ் என்ற வார்த்தையை கேட்டு மகிழ்ச்சி அடைந்ததேஇல்லை. ஆனால் தற்போது முதல் முறையாக மகிழ்ச்சியடைகிறேன். உங்களின்அன்புக்குநன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.