Skip to main content

டாப்ஸி, ராதிகா ஆப்தேவுக்கு பதிலாக த்ரிஷா?

Published on 24/04/2019 | Edited on 24/04/2019

ஸ்பானிஷ் திரைப்படமான ‘தி இன்விசிபில் கெஸ்ட்’ படத்தை ஹிந்தியில்  ‘பத்லா’ என்ற தலைப்பில் ரீமேக் செய்தார்கள். அமிதாப் பச்சன், டாப்ஸி பன்னு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்கள். ஷாருக் கானின் ‘ரெட் சில்லிஸ்’ தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க சுஜய் கோஷ் இயக்கினார். உலகளவில் வெற்றிகரமாக ஓடிய இத்திரைப்படம் நூறு கோடிகளுக்கு மேல் வசூல் சாதனை செய்திருந்தது. 
 

trisha

 

 

இந்நிலையில் ஹிந்தியில் எடுக்கப்பட்ட பட்லாவை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாகவும். அதில் டாப்ஸி கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தை இயக்குனர் ராதா மோகன் இயக்குவார் என்று சொல்லப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

பத்லாவை போல கடந்த 2018ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான  ‘அந்தாதுன்’ படமும் செம ஹிட் அடித்தது. இதை சித்தார்த் தமிழில் கண்டிப்பாக ரீமேக் செய்வேன் என்று ட்விட்டரில் ஒருமுறை தெரிவித்தார். பின்னர், சித்தார்த் அந்தாதுன் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார் என்று பல செய்திகள் வெளியான நிலையிலும் ராதிகா ஆப்தே நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் யார் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது வந்த தகவல்களில் த்ரிஷாதான் அந்த கதாபாத்திரத்திலும் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. தபு நடித்த கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது. விரைவில் இதுகுறித்தும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

இந்த படங்கள் இன்றி த்ரிஷா நடித்து முடித்த சதுரங்க வேட்டை-2 , கர்ஜணை உள்ளிட்ட படங்கள் ரிலீஸுக்காக காத்திருக்கின்றன. 96 மற்றும் பேட்ட ரிலீஸுக்கு பின்னர் பல படங்களில் திரிஷாவை நடிக்க ஒப்பந்தம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மீண்டும் விஜய் படத்தில் த்ரிஷா

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
trisha do a cameo role in vijay the goat movie

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’. விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் இப்படத்தில், மீனாட்சி சௌத்ரி, சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், லைலா, வைபவ், அரவிந்த் ஆகாஷ், விஜய் ராஜ், பிரேம் ஜி என நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக், கடந்த புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி வைரலானது. 

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இது குறித்து சமீபத்திய நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கட் பிரபு, “இந்த மாசத்துக்குள் கிட்டத்தட்ட க்ளைமாக்ஸ் முடிந்து விடும். வெளிநாட்டில் 1 ஷெட்யூல் இருக்கு. அதோட மொத்த படப்பிடிப்பும் முடியுது. நிறைய பாடல்கள் படத்தில் இருக்கு. ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியாக மே ஆகிடும்” என பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். இப்படத்தில் விஜய் ஒரு பாடல் பாடியுள்ளதாக யுவன் ஷங்கர் ராஜா சமீபத்திய இசை நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், இப்படத்தில் த்ரிஷா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படப்பிடிப்பில் இரண்டு நாள் கலந்து கொண்டுள்ளதகவும் கூறப்படுகிறது. இத்தகவல் உண்மையாகும் பட்சத்தில் ஆறாவது முறையாக விஜய்யுடன் இணைந்து அவர் நடிக்கிறார். ஆதி, திருப்பாச்சி, கில்லி, குருவி, லியோ கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் வெங்கட் பிரபு இயக்கத்தில் மங்காத்தா படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. 

Next Story

மன்சூர் அலிகானுக்கு விதித்த உத்தரவு ரத்து

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
mansoor ali khan trisha case update

மன்சூர் அலிகான், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் செய்தியாளர்கள் சந்திப்பில் த்ரிஷா குறித்துப் பேசியது பெரும் சர்ச்சையானது. அவர், லியோ படத்தில் த்ரிஷாவை பாலியல் தொந்தரவு செய்யும் காட்சி தனக்கு கிடைக்கவில்லை எனக் கூறியிருந்தார். இதற்கு த்ரிஷா, கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் பல்வேறு பிரபலங்கள், தமிழ் திரையுலகை சார்ந்த சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

பின்பு இது குறித்து விளக்கமளித்த மன்சூர் அலிகான், நான் பேசியதை திட்டமிட்டே வேறு மாதிரி கட் செய்து தவறாக பரப்புவதாக கூறி மன்னிப்பு கேட்கமுடியாது என தெரிவித்திருந்தார். இதையடுத்து மன்சூர் அலிகான் மீது ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற சம்பந்தப்பட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைத்தது. அதன்படி மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளில் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக மன்சூர் அலிகானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். இதனிடையே முன் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டார். த்ரிஷாவும் மன்னித்துவிட்டதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். பின்பு இந்த விவகாரம் தொடர்பாக சட்ட நிபுணர்களின் ஆலோசனைக்கு அனுப்பியது சென்னை காவல்துறை. பின்பு த்ரிஷாவிடம் விளக்கம் கேட்டிருந்தனர். மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டுவிட்டதால், மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என த்ரிஷா பதில் கடிதம் எழுதியிருந்தார். இதனிடையே த்ரிஷா, குஷ்பு மற்றும் சிரஞ்சீவி ஆகியோர் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார் மன்சூர் அலி கான். அவர்கள் மூவரும் தலா ரூ.1 கோடி தர உத்தரவிடக்கோரி மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி சதிஷ் குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, த்ரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி ஆகியோர் பதிலளிக்க ஆணை பிறப்பித்து ஒத்தி வைத்தார். அடுத்த விசாரணையின் போது, நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கில் மனு தொடரப்பட்டுள்ளதாக கூறி மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும் அபராதத் தொகையை 2 வாரங்களில் சென்னை அடையாறு புற்று நோய் மருத்துவமனைக்கு செலுத்த உத்தரவிட்டார். இதையடுத்து நடந்த விசாரணையில் மன்சூர் அலி கான் தரப்பில், அபராதத் தொகையை செலுத்த பத்து நாட்கள் அவகாசம் கேட்டு கோரிக்கை வைத்தது. அவரது கோரிக்கை ஏற்று 10 நாட்கள் அவகாசம் வழங்கி விசாரணை ஒத்திவைக்கபட்டது. 

இதனை தொடர்ந்து தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார் மன்சூர் அலி கான். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. மேலும் இந்த உத்தரவை திரும்ப பெறக்கோரி தனி நீதிபதி முன் மன்சூர் அலிகான் வலியுறுத்தலாம் எனக் கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது. இந்த நிலையில் இன்று இந்த வழக்கானது விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது தனி நீதிபதி விதித்த ரூ.1 லட்சம் அபராத உத்தரவை ரத்து செய்துள்ளது. மேலும் த்ரிஷாவிற்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்த உத்தரவை மட்டும் உறுதி செய்தது.