ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தார்பார் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து, ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. தர்பார் ஷூட்டிங் முடிவடைந்தவுடனே ரஜினிகாந்த் அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
விஸ்வாசம் படத்தை அடுத்து சூர்யாவை வைத்து இயக்குனர் சிவா படம் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பாக ரஜினிகாந்த் படத்தை எடுக்கிறார்.
ரஜினியின் 168வது படமாக உருவாகும் இதில் டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
டிசம்பர் 11ஆம் தேதி தலைவர் 168 படத்திற்கான பூஜை போடப்பட்டது. இணையத்தில் அந்த புகைப்படமும் வெளியாகி வைரலானது. இந்நிலையில் இன்று ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் தலைவர் 168 படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ளது.
சூர்யா தற்போது தனது 42வது படமான ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 3டி முறையில் சரித்திரப் படமாக 38 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் வருகிற ஏப்ரலில் வெளியாகவுள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு கோவா, கொடைக்கானல், தாய்லாந்து, சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. அதில் கடந்த நவம்பரில் சென்னையில் நடந்த படப்பிடிப்பின் போது, ரோப் கேமரா அறுந்து சூர்யாவின் தோள்பட்டையில் மோதியதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்பு ஓய்விற்காக வெளிநாடு சென்று பின்பு சென்னை வந்து இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இப்படத்தின் கிளிம்ஸ் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், கடந்த பொங்கலை முன்னிட்டு செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது.
இதனைத் தொடர்ந்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருவதாக படக்குழு அறிவித்தனர். அது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டனர். சூர்யா டப்பிங் செய்யும் புகைப்படங்களும் வெளியாகின. இந்த நிலையில் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்பு சற்று தாமதமாக வெளியானது. டீசரில், பீரியட் ட்ராமா ஜானருக்கே உரித்தான கப்பல் காட்சிகள், ஆக்ஷன் காட்சிகள் எனப் பல அம்சங்கள் இடம்பெறுகிறது. மேலும் சூர்யாவிற்கும் பாபி தியோலுக்கும் இடையேயான சண்டைக் காட்சிகள் அதிகம் இருக்குமெனத் தெரிகிறது. இரு தரப்பிற்கும் நடக்கும் மோதலே படக்கதையாக உருவாகியுள்ளது போல் தெரிகிறது. டீசரில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் வசனம் வருகிறது. அதுவும் சூர்யா ஆக்ரோஷமாக ‘பெருமாச்சி..’ எனக் கத்தும் காட்சியாக இருக்கிறது. பட வெளியீடு குறித்து டீசரில் சொல்லவில்லை. விரைவில் அது குறித்த அப்டேட் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டீசர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கங்குவா’. இப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 3டி முறையில் சரித்திரப் படமாக 10 மொழிகளுக்கு மேலாக வெளியாக உள்ள இப்படத்தை, ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் அடுத்த வருடம் ஏப்ரலில் வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.
இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சூர்யாவின் பிறந்தநாளன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்ததாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதையடுத்து சென்னையில் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த படப்பிடிப்பில் விபத்து நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று, படப்பிடிப்பின் போது ரோப் கேமரா அறுந்து சூர்யாவின் தோள்பட்டையில் மோதியுள்ளதாகவும் அதில் சூர்யாவுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த விபத்து காரணமாக இன்று படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.