ADVERTISEMENT

புதிய அவதாரம் எடுத்த கஸ்தூரி!

07:11 PM Jun 25, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாடு ப்ரீமியர் லீக், 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ஆண்டுக்கு ஒரு முறை போட்டிகள் நடைபெற்று வருகிறது. 20 ஓவர் தொடராக நடத்தப்படும் இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொண்டு விளையாடும். கடந்த ஆண்டு நடைபெற்ற தொடரில் 'சேப்பாக் சூப்பர் கில்லீஸ்' அணி கோப்பையைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு ப்ரீமியர் லீக் போட்டி சில தினங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 'தமிழ்நாடு ப்ரீமியர் லீக் 2022' போட்டியை நடிகை கஸ்தூரி தொகுத்து வழங்கி வருகிறார். இதனைக் கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். இதனிடையே கமெண்ட்ரியாக அவதாரம் எடுத்துள்ள கஸ்தூரிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT