Skip to main content

திருப்பூர் சுப்ரமணியம் கடிதத்தால் பரபரப்பு

Published on 16/11/2023 | Edited on 16/11/2023

 

tirupur subramaniyam resign his post

 

தமிழ்நாடு திரையரங்க மற்றும் மல்டிப்ளக்ஸ் உரிமையாளர் சங்கத் தலைவராக பொறுப்பு வகித்து வருபவர் திருப்பூர் சுப்ரமணியம். இவர் திருப்பூரில் ஸ்ரீ சக்தி சினிமாஸ் என்ற மல்டிபிளக்ஸ் திரையரங்கையும் நடத்தி வருகிறார். இதில் கடந்த தீபாவளியன்று சல்மான் கான் நடித்த 'டைகர் 3' படம் அரசு அனுமதியின்றி திரையிடப்பட்டதாக புகார் எழுந்தது. அதனடிப்படையில், அரசு அதிகாரிகள் அங்கு விசாரணை நடத்திய போது, அனுமதியின்றி 6 சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டது தெரிய வந்தது. 

 

இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு திரையரங்க உரிமையாளருக்கு மாவட்ட கலெக்டர் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில், திடீரென்று திருப்பூர் சுப்ரமணியம், தமிழ்நாடு திரையரங்க மற்றும் மல்டிப்ளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக சங்க செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “எனது சொந்த வேலை காரணமாக சங்கத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்கிறேன். இதுவரை ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி” என குறிப்பிட்டுள்ளார். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நிவாரண நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டும் தமிழக அரசு.. ஓய்வுபெற்ற காவலா்கள் குற்றச்சாட்டு!

Published on 21/08/2020 | Edited on 21/08/2020

 

 Government of Tamil Nadu discriminates in providing relief funds

 

அரசுப் பணியில் இருக்கும் ஊழியா்கள் பணி நிமித்தமாக சமூக விரோதிகளால் கொல்லப்படும்போது ஒவ்வொரு துறைக்கும் ஏற்றார் போல் நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த ஜனவரி மாதம் குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த காவலா் வில்சனை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் வில்சன் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கியது தமிழக அரசு. அதே போல் ஓசூரில் இரண்டு காவலா்கள் கொலை செய்யப்பட்டதற்கும் அந்த குடும்பங்களுக்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கியது. 

 

சமீபத்தில், ரவுடியால் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட காவலா் சுப்பிரமணியத்துக்கு தமிழக அரசு ஏன் ஒரு கோடி ரூபாய் வழங்கவில்லை என ஓய்வு பெற்ற காவலா்கள் கேள்வி எழுப்பியுள்ளனா். இது சம்மந்தமாக நாகா்கோவில் கலெக்டா் அலுவலகம் முன் அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனா். அப்போது பேசிய ஓய்வு பெற்ற காவலா்கள் இந்த கரோனா காலக்கட்டத்தில் காவலா்கள் வீடு, மனைவி, மக்கள், பெற்றோர்களை மறந்து கடமையுடன் பணியாற்றி வருகிறார்கள். இதில் பலா் கரோனா தாக்கி உயிரிழந்தும் உள்ளனா்.
 

மேலும் சமூக விரோதிகளால் காவலா்கள் கொல்லப்படும்போது அந்த பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஏற்கனவே ஒரு கோடி ருபாய் தமிழக அரசு வழங்கியுள்ளது. அதை ஏன் சுப்பிரமணியன் குடும்பத்துக்குக்கு வழங்கவில்லை என்றும் 50 லட்சத்தை மட்டும் முதல்வா் அறிவித்தது ஏன் என்றும் வினா எழுப்பினர். இந்த விஷயத்தில் மட்டும் ஏன் தமிழக அரசு பாரபட்சம் பார்க்கிறது. வில்சன் கொலையை போல்தான் சுப்பிரமணியன் படுகொலையையும் பார்க்கிறோம் அரசும் அதை உணர வேண்டும் என்றனா்.
 

 

Next Story

அரசு மரியாதையுடன் இளம் காவலர் சுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்

Published on 21/08/2020 | Edited on 21/08/2020
dhuraimuthu

 

வாரண்ட்டை நிறைவேற்றும் வகையில் தொடர்புடைய கொலை குற்றவாளியான ஏரல் துரைமுத்துவைப் பிடிக்கப்போன, க்ரைம் போலீசின் இளம் காவலர் சுப்பிரமணியம் துரைமுத்துவைத் துரத்தியபோது நடந்த தகராறில் துரைமுத்து வீச முற்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதன் முன்னோட்டத்தை ஏற்கனவே நக்கீரன் இணையதளம் வெளிப்படுத்தியிருந்தது.

 

மங்கலக்குறிச்சியில் நடத்தப்பட்ட இரட்டைக் கொலைக் காரணமான துரைமுத்துவை பழிவாங்க நினைத்த எதிர்த்தர்ப்பினர் துரைமுத்துவின் சகோதரன் கண்ணனைக் கொன்றுள்ளனர். அதற்கு பழிவாங்கும் நோக்கத்தோடு எதிர் தரப்பின் கணேசபாண்டியனை பேட்டைப் பகுதியில் துரைமுத்து பழிவாங்யிருக்கிறார். எதிர் தரப்பில் மூன்று உயிரிழப்புகள் என்பதால், துரைமுத்துவை விடவும் வலுவான எதிர்த்தரப்பு துரைமுத்துவை கொலை செய்ய வேவு பார்த்த நேரத்தில்தான் அவர்களைப் பழிவாங்க தன் சகாக்கள் நான்கு பேர்களுடன் வேட்டைத் தடுப்பு காவலரான தனது உறவினர் சுடலைக்கண்ணன் வேலை பார்க்கும் மணக்கரைப் பக்கம் உள்ள வனத்துறை காட்டின் ஒரு பம்ப்செட்டில் 10 நாட்களுக்கும் மேலாக பதுங்கியிருந்துள்ளனர். இந்த சமயத்தில் துரைமுத்துவை பிடிக்கச் சென்றபோதுதான் காவலர் சுப்பிரமணியம் வெடிகுண்டுச் சம்பவத்தில் உயிரிழந்தார்.

 

இதனிடையே வெடிகுண்டுச் சம்பவத்தில் பலியான இளம் காவலர் சுப்பிரமணியத்தின் உடல் நல்லடக்கத்திற்காக அவரது சொந்த ஊரான பண்டாரவிளைக்குக் கொண்டு வரப்பட்டது. அவரது உடல் கொண்ட பெட்டியை நெல்லை போலீஸ் கமிஷனர் தீபக்தாமோர், தென்மண்டல ஐ.ஜி.முருகன் மற்றும் போலீசார் சுமந்து வந்தனர்.

 

மூன்று மாதக் கர்ப்பிணியான காவலர் சுப்பிரமணியனின் மனைவி, தன் 10 மாத ஆண் குழந்தையை தன் மடியில் வைத்துக்கொண்டு டி.ஜி.பி. திரிபாதி மற்றும் கலெக்டர் சந்தீப் நந்தூரியிடமும் கண்ணீர் வடித்தார், இந்த சம்பவம் அனைவரின் கண்களையும் குளமாக்கியதோடு அங்கிருந்தோரின் நெஞ்சையும் கலங்கடித்துவிட்டது.

 

சுப்பிரமணியனின் வயதான தந்தை பெரியசாமி பெற்ற மகனைப் பறி கொடுத்த துயரத்திலிருந்தார். அரசு மரியாதையோடு ஆயுதப்படையினரின் 30 குண்டுகள் முழங்க வீரமரணமடைந்த இளம் காவலர் சுப்பிரமணியனின் உடல், நல்லடக்கம் செய்யப்பட்டது. உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

 

தான் துரத்துவது கொடூர கொலைக் குற்றவாளி என்று தெரிந்தே உயிரைத் துச்சமாக மதித்து, கடமை உணர்வோடு அரச கட்டளையை நிறைவேற்ற பாய்ந்து சென்ற இளம் காவலர் சுப்பிரமணியன், தன்னுயிரைக் கொடுத்து கடமையைப் பழுதில்லாமல் நிறைவேற்றினார் என்பது அப்பகுதி மக்களின் கருத்தாக உள்ளது.