கரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள்அதிகரித்து வருவதால்இந்தியா முழுவதும் ஊரடங்கு கடந்த மூன்று மாதங்களாக அமலில் உள்ளது. சிலர் இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்ளும் சம்பவமும் பல இடங்களில் நடைபெறுகிறது.
டெல்லியைச் சேர்ந்த டிக்டாக் பிரபலமான சியா கக்கர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம்பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சியா அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
16 வயதே ஆன சியாவின் மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. டிக்டாக் தளத்தில் இவரை1.1. மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். இவரது மரணத்திற்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.