தமிழ்த் திரையுலகினர் மற்றும் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் 'துணிவு' மற்றும் விஜய்யின் 'வாரிசு' படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைபோடுகின்றன. இரு படங்களையும் பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாகத் திரையரங்குகளில் கூடுகிறார்கள். இதனால் தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகள் எல்லாம்திருவிழாக்கோலம்பூண்டுள்ளன.
முதல் நாள் திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம், அடாவடி, உயிரிழப்பு, திரையரங்கு சேதம், பேனர் கிழிப்பு எனப் பல சம்பவங்கள் அரங்கேறின. அந்த வகையில்சேலம் மாவட்டத்தில் துணிவு படம் பார்க்க வந்த பிரதீப் என்ற அஜித் ரசிகர் திரையரங்கு கதவின் மீது ஏறி நின்று கொண்டாடிய போது தவறி விழுந்ததால்கால் முறிந்துமயக்க நிலையில் இருந்துள்ளார். அவரைபார்த்த விஜய் ரசிகர்கள் நவீன், கவின், நற்குணராஜ் ஆகியோர் ஓடிச்சென்று காப்பாற்றியுள்ளனர்.பின்னர் தண்ணீர் கொடுத்துஉடனடியாகஆம்புலன்ஸ் இருக்கும் இடத்துக்குஅவரைதூக்கிசென்றனர்.
அவரை மருத்துவமனையில் அனுமதித்து விட்டுஅவரது பெற்றோருக்கும் தகவல் அளித்துள்ளனர். ஒரு திரையரங்கில் இரு ரசிகர்களும்மாறி மாறி போட்டிப் போட்டுக் கொண்டுமோதலில் ஈடுபட்ட நிலையில், அஜித் ரசிகருக்கு விஜய் ரசிகர்கள் உதவி செய்திருப்பது பலரதுகவனத்தை ஈர்த்துள்ளது. அப்போதுஅங்கு பணியிலிருந்தபள்ளப்பட்டி காவல் உதவி ஆய்வாளர் வசந்தகுமார் இந்தச் சம்பவம் குறித்ததகவலறிந்து சம்பந்தப்பட்ட இளைஞர்கள்நவீன், கவின், நற்குணராஜ் ஆகியோரை அழைத்து வெகுவாகப்பாராட்டியுள்ளார்.