தமிழ் சினிமாவில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுணிவு படம் இன்று வெளியாகியிருக்கிறது. முன்னணி நடிகர்களான அஜித் - விஜய் படங்கள் 2023 பொங்கல் பண்டிகையைமுன்னிட்டு திரைக்கு வந்திருக்கின்றன. இந்த 2 படங்களுமே ஒரே சமயத்தில் ரிலீசானதால்ரசிகர்களின் எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது.
கடந்த 9 ஆண்டுகளுக்குப் பிறகுவிஜய், அஜித் படங்கள் ஒன்றாக ரிலீசானதால், ரசிகர்கள் மட்டுமல்லாமல், சினிமா பிரியர்களும் இந்தப் படங்களை பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், நடிகர் அஜித்தின் ரசிகர்கள் துணிவு படத்தைக் காணபல்வேறு விதமானநிகழ்ச்சிகளைநடத்தினர். அதில், ஒருபடி மேலே சென்ற பொள்ளாச்சி அஜித் ரசிகர்கள்முதல் காட்சிக்கு ஏகப்பட்ட ஏற்பாடுகளைச்செய்தனர்.
பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் உள்ள தங்கம் தியேட்டரில்துணிவு படம் ரிலீசானது. இதைக் கொண்டாடும் விதமாக, துணிவு படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்குஒரிஜினல் ரூபாய் நோட்டுகளைப் போல்டிக்கெட்டுகளை அச்சடித்துரசிகர்களுக்கு விற்பனை செய்திருக்கின்றனர்.
இதுகுறித்துபொள்ளாச்சி அஜித் ரசிகர்கள் கூறும்போது, "பொள்ளாச்சின்னுபாத்தாலே, இங்க தலவெறியர்கள் தான் அதிகம். ஆனால், இந்த தடவ ரூபாய் நோட்டுல அஜித் சாரை வச்சி டிக்கெட் அடிச்சதுனாலஇன்னைக்கு நாங்க ட்ரெண்டாகிஇருக்கோம். நாங்க துணிவா வருவோம். உற்சாகமா வருவோம்" எனப் பேசியுள்ளனர்.