"7 வருடங்களுக்கு பிறகு.." - தனுஷ் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு

Thiruchitrambalam first single release date announced

செல்வராகவன்இயக்கும் 'நானே வருவேன்' படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ் தற்போது தெலுங்கு இயக்குநர்வெங்கிஅட்லூரிஇயக்கும் 'வாத்தி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையேசன்பிக்சர்ஸ்தயாரிப்பில்மித்ரன்ஜவஹர்இயக்கும் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில்நித்யாமேனன்,ராஷிகண்ணா, பிரியா பவானிஷங்கர், பிரகாஷ்ராஜ், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.அனிருத்இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டு வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தின் முதல் பாடல் குறித்தஅறிவிப்பைப்படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படிதிருச்சிற்றம்பலம்படத்தின்முதல்பாடலானதாய்கிழவி என்ற பாடல் வரும் 24 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலைஅனிருத்இசையில் நடிகர் தனுஷ்எழுதிப்பாடியுள்ளார். நாட்டாமை படத்தில் நடிகர் பொன்னம்பலம் தாய்மனோரமாவைபார்த்து தாய்க்கிழவி என்றுஆக்ரோஷமாகப்பேசும்வசனத்தைப்பாடலின் முதல் வரியாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பானவீடியோவைவெளியிட்ட தனுஷ் 7வருடங்களுக்குப்பிறகு மீண்டும் DNA (தனுஷ்அண்ட்அனிருத்) இந்த கூட்டணி இணைந்துள்ளது. இது சிறப்பான ஒன்று என்றுநெகிழ்ச்சியாகக்குறிப்பிட்டுள்ளார்.

actor dhanush anirudh Thiruchitrambalam
இதையும் படியுங்கள்
Subscribe