theatre

தமிழகத்தில், கரோனா தொற்று பாதிப்பால்திரையரங்குகள் மூடப்பட்டு, சமீபத்தில் மீண்டும் திறக்கப்பட்டது. ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற படங்களும், சிலபுதுப்படங்களும் வெளியானாலும், ரசிகர்கள் பெரிய அளவில் திரையரங்குகளுக்கு வரவில்லை. இதனால் சில திரையரங்குகள்,சிலசலுகைகளை அறிவித்து ரசிகர்களை திரையரங்குகளுக்கு வரவழைக்க முயன்றன. ஆனால் அம்முயற்சி பெரியளவில் பலனளிக்கவில்லை.

Advertisment

இந்த நிலையில், 'நிவர்' புயல் காரணமாகச் சென்னையில் கனத்தமழை பெய்து வருகிறது. மேலும், புயல் இரவு கரையைக் கடக்கும் போது, பலத்த காற்றுடன் அதிகனமழை பெய்யும்எனவானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்துபுயலின்காரணமாக, சென்னையில் திரையரங்குகள் மூடப்படுவதாக திரையரங்குஉரிமையாளர் சங்கம்அறிவித்துள்ளது. மேலும், புயலின்தாக்கத்தைப் பொறுத்து, மீண்டும் திரையரங்குகளை திறப்பதுகுறித்துமுடிவெடுக்கப்படும் எனவும்அச்சங்கம் அறிவித்துள்ளது.

Advertisment