Skip to main content

தளபதி 64 படத்தின் கதை இதுதானா...?

Published on 14/11/2019 | Edited on 14/11/2019

பிகில் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். பேட்ட புகழ் மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்க, வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் சமீபத்தில் நடந்து முடிந்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தலைநகர் டெல்லியில் நடந்து வருகிறது.

 

csa

 

 

இதில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்து வரும் நிலையில் இப்படத்தின் கதை கசிந்ததாக தற்போது பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. நீட் தேர்வுக்கு பலியான அனிதா வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராவதாக கூறப்படுகிறது. அரியலூர் மாணவி அனிதா பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றும் நீட் தேர்வால் மருத்தவ படிப்பு சீட் கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார். நாட்டையே உலுக்கிய இச்சம்பவத்தை மையமாக வைத்தே தற்கால கல்வி முறையை சாடும் படமாக இப்படம் தயாராவதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இனி ‘தளபதி 64’ இல்லை... வெளியானது விஜய் பட தலைப்பு!

Published on 31/12/2019 | Edited on 31/12/2019

பிகில் படத்தை தொடர்ந்து விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்யுடன் விஜய்சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படம் சென்னை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் ஷூட் செய்யப்பட்டு தற்போது கர்நாடகாவில் சிமோகா மத்திய சிறையில் ஷூட் செய்யப்பட்டு வருகிறது.
 

master

 

 

டிசம்பர் தொடக்கத்திலிருந்து இந்த பகுதியில் ஷூட்டிங்கை தொடங்கியுள்ள படக்குழு அடுத்த மாதம் வரை ஷூட்டிங்கை நடத்த திட்டமிட்டுள்ளது. விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் சிமோகாவில்தான் எடுக்கிறார்கள் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு இன்று மாலை ஐந்து மணிக்கு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவதாக முன்னமே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உலகளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளது. தளபதி 64 என்று சொல்லப்பட்டு வந்த இப்படத்திற்கு மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ளது. 

 

 

Next Story

தளபதி 64 ஷூட்டிங்கில் ரசிகருக்கு கேக் ஊட்டிய விஜய் சேதுபதி!

Published on 28/12/2019 | Edited on 28/12/2019

பிகில் படத்தை தொடர்ந்து விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்யுடன் விஜய்சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படம் சென்னை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் ஷூட் செய்யப்பட்டு தற்போது கர்நாடகாவில் சிமோகா மத்திய சிறையில் ஷூட் செய்யப்பட்டு வருகிறது.
 

vijay sethupathi

 

 

டிசம்பர் தொடக்கத்திலிருந்து இந்த பகுதியில் ஷூட்டிங்கை தொடங்கியுள்ள படக்குழு அடுத்த மாதம் வரை ஷூட்டிங்கை நடத்த திட்டமிட்டுள்ளது. விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் சிமோகாவில்தான் எடுக்கிறார்கள் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் தனது பிறந்தநாளை கொண்டாடிவிட்டு, கேக்கை எடுத்துக்கொண்டு சிமோகா ஷூட்டில் இருக்கும் விஜய் சேதுபதியை பார்க்க சென்றுள்ளார். அப்போது அவருக்கு பிறந்தநாள் என்ற விஷயம் தெரிந்த விஜய் சேதுபதி, அவருக்கு கேக்கை ஊட்டிவிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.