Skip to main content

"நடிகர்கள் பின்னால் ஓடுவது அவலநிலை" - ஜல்லிக்கட்டு குறித்து தங்கர் பச்சான் முதல்வருக்கு கோரிக்கை

Published on 19/01/2023 | Edited on 19/01/2023

 

thankar bachan about jallikattu

 

தமிழகத்தின் பல இடங்களில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு மற்றும் எருது விடும் விழா நடைபெற்று வருகிறது. உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் வழக்கம்போல் வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்தன. இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. 

 

இந்நிலையில், இயக்குநர் தங்கர்பச்சான் ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு கார் பரிசாக வழங்குவதை விட, உழவுத்தொழில் தொடர்பான இயந்திரங்கள் வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காரின் தொகைக்கு ஈடாக அந்த வீரனுக்கு உழவுத்தொழில் தொடர்பான கருவிகள், மாடுகள், நிலம் இவற்றைத் தந்து அவருடைய வாழ்வுக்கு முன்னேற்றம் ஏற்படுத்தித் தந்தால் இன்னும் கூடுதலான மகிழ்ச்சியை நாம் அடையலாம்.

 

பரிசு தரும் காரை வைத்துக்கொண்டு (எரிபொருள்) பெட்ரோல், டீசல் விற்கும் விலையில் அதற்கு செலவழிப்பதற்காகவே அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் போராட வேண்டியிருக்கும் என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். தயவுகூர்ந்து முதலமைச்சர் இக்கோரிக்கை குறித்து சிந்தித்து செயல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

மேலும், மற்றொரு பதிவில், "உயிரைப் பணயம் வைக்கும் ஜல்லிக்கட்டு வீரர்களின் வீரம் தான் போற்றுதற்குரிய உண்மையான வீரம். அவர்கள் தான் தமிழ்நாட்டின் மானத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு இச்சமூகம் உரிய மதிப்பளிப்பதில்லை! இதேவேளையில் பொய்ப்புனைவு சினிமா காட்சிகளில் தோன்றுபவர்களை உண்மையான வீரனாக எண்ணி இளைஞர் சமுதாயத்தினர் சண்டையிட்டுக் கொண்டு அவர்களின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கின்றனர். இந்த அவல நிலை என்று மாறுமோ" எனப் பதிவிட்டுள்ளார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கர்பச்சானுக்கு ஜோதிடம் பார்த்த நபர் விடுவிப்பு

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
thankar bachan kili fortune released

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. தமிழகத்தில் வருகிற 19ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெறவுள்ள நிலையில் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில் என்.டி.ஏ கூட்டணி சார்பில் கடலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தங்கர் பச்சான், தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது கடலூர் ஒன்றியம் தென்னம்பாக்கத்தில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டபோது, அப்பகுதியின் சாலை ஓரத்தில் இருந்த கிளி ஜோதிடரிடம் ஜோதிடம் பார்த்தார். அவருக்கு அழகுமுத்து அய்யனார் படம் வந்ததால், நீங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள் என ஜோதிடர் கூறினார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. 

இதனைத் தொடர்ந்து தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த நபர் மற்றும் இன்னொரு ஜோதிடரையும் வனத்துறையினர் கைது செய்தனர். வனவிலங்கு பாதுகாப்பு திருத்தச் சட்டத்தின் கீழ், கிளிகளை வளர்ப்பது குற்றம் என்ற பிரிவின் கீழ் நடவடிக்கை எடுத்த அவர்கள், ஜோதிடக்காரர்களிடமிருந்த 4 கிளிகளையும் பறிமுதல் செய்தனர். இந்த கைதுக்கு பா.ம.க தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்தார்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஜோதிடர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களது வயதை கருத்தில் கொண்டு அவர்களிடம் பச்சைக்கிளியைக் கூண்டில் அடைத்து வைத்திருப்பது தவறு என அறிவுரையும் வழங்கி விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தங்கர் பச்சானுக்கு ஜோதிடம் பார்த்த நபருக்கு நேர்ந்த கதி!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
thankar bachan kili fortune teller arrested

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. தமிழகத்தில் வருகிற 19ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெறவுள்ள நிலையில் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில் என்.டி.ஏ கூட்டணியில் சார்பில் கடலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் தங்கர் பச்சான், தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது கடலூர் ஒன்றியம் தென்னம்பாக்கத்தில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டபோது, அப்பகுதியின் சாலை ஓரத்தில் இருந்த கிளி ஜோதிடரிடம் ஜோதிடம் பார்த்தார். அவருக்கு அழகுமுத்து அய்யனார் படம் வந்ததால், வெற்றி பெறுவீர்கள் என ஜோதிடர் கூறினார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. 

இந்த நிலையில், தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த நபரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். வனவிலங்கு பாதுகாப்பு திருத்தச் சட்டத்தின் கீழ், கிளிகளை வளர்ப்பது குற்றம் என்ற பிரிவின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ள அவர்கள், ஜோதிடமிருந்த 4 கிளிகளையும் பறிமுதல் செய்தனர்.