Skip to main content

தளபதி 63 அப்டேட் இதுவாகத்தான் இருக்கும்... திமுக எம்எல்ஏ எதிர்பார்ப்பு...

Published on 19/06/2019 | Edited on 19/06/2019

வருகிற ஜூன் 22ஆம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்தநாள் வருடா வருடம் அவரது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் விஜய்யின் தற்போது நடிக்கும் படம் குறித்த அப்டேட் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று மாலை அப்டேட் விட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
 

thalapathy 63

 

 

நேற்று தளபதி 63 அப்டேட் குறித்து ட்வீட்டில்  , “நானும் உங்க கூட சேர்ந்து எப்போதுமே தளபதி பட அப்டேட் எங்க என்று மற்ற தயாரிப்பாளர்களிடம் கேட்பேன் என்பதை நீங்கள் எல்லாம் மறந்துவிட்டீர்கள். தளபதி 63 அப்டேட் சரியான நேரத்தில் வரும். உங்களுடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்காகதான் 24 மணிநேரமும் கடுமையாக உழைக்கின்றோம்” என்று தெரிவித்திருந்தார்.
 

இந்நிலையில் இன்று காலை தயாரிப்பாளர் அர்ச்சனா மாலை ஆறு மணிக்கு அப்டேட் வருகிறது தயாராக இருங்கள் என்று விஜய் ரசிகர்களுக்கு அலெர்ட் கொடுத்துள்ளார். அந்த ட்வீட்டிற்கு திமுக எம்.எல்.ஏ-வும், சினிமா தயாரிப்பாளருமான ஜே. அன்பழகன் இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில், “படத்தைப் பற்றிய அப்டேட்டுகளுக்காக படக்குழு ஆர்வத்துடன் காத்திருக்க வைத்துள்ளது. படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பை பார்க்கையில் இன்று மாலை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அல்லது டைட்டில் வெளியாக வாய்ப்பிருக்கிறது. படக்குழுவுக்கு வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவி வேட்டியில் விஜய்... வெளியானது பிகில்....

Published on 21/06/2019 | Edited on 21/06/2019

நாளை நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தற்போது அட்லியின் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
 

bigil

 

 

இந்த வருட தொடக்கத்தில் தொடங்கப்பட்ட இப்படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து 120 நாட்களுக்கு மேல் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிறந்தநாள் அன்று ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று சொல்லப்பட்ட நிலையில், தற்போது தயாரிப்பாளர் அர்ச்சனா வெளியிட்டுள்ளார். படத்தின் பெயர் பிகில். காவி வேட்டியில் வயதான விஜய், கால்பந்தாட்டக்காரரான விஜய் உள்ளிட்ட இரு கதாபாத்திரங்களில் தோற்றம் அளிக்கிறார்.
 

இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்பது போல் ட்விட்டில் தெரிவித்துள்ளனர். 


 

Next Story

‘வந்தால் அண்ணா, வராவிட்டால் பெரியார்’- சர்ச்சையில் விஜய்

Published on 20/06/2019 | Edited on 20/06/2019

நடிகர் விஜய்யின் பிறந்தநாள் வரும் 22ம் தேதி வருகிறது. இதனை வருடா வருடம் விஜய்யின் ரசிகர்கள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள்.
 

vijay

 

 

ஒவ்வொரு மாவட்டத்திலும் விஜய் ரசிகர்கள் வெவ்வேறு வகையில் போஸ்டர்களை ஒட்டி கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் திண்டுக்கல்லில் ஒட்டப்பட்ட விஜய்யின் பிறந்தநாள் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 

சம்மந்தப்பட்ட அந்த போஸ்டரில் நடிகர் விஜய்யுடன், அண்ணாவும் பெரியாரும் இருப்பதுபோல எடிட் செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த போஸ்டரில், "நீங்கள் அரசியலுக்கு வந்தால் அறிஞர் அண்ணா, வராவிட்டால் பெரியார்" எனும் வாசகம் இடம் பெற்றுள்ளது. இது தான் சர்ச்சைக்கு காரணம்.
 

விஜய்யின் இந்த பிறந்தநாள் போஸ்டர் வைரலாகி வருவதால், மேலும் எதிர்ப்பு கிளம்பும் என்றே கருதப்படுகிறது.