Skip to main content

‘அஜித் 60’யும் ரீமேக்தானா? ரசிகர்கள் புலம்பல்...

Published on 26/02/2019 | Edited on 26/02/2019
ajith kumar


பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடித்து வெளியான பிங்க் செம ஹிட் அடித்தது. தற்போது இந்த படத்தை தமிழில் போனி கபூரின் தயாரிப்பு நிறுவனம் ரீமேக் செய்கிறது. தமிழில் அமிதாப் கதாபாத்திரத்தில் நடிகர் அஜித் நடிக்கிறார், டாப்ஸி கதாபாத்திரத்தில் ஷ்ரதா ஸ்ரீநாத் நடிக்கிறார். எச். வினோத் இந்த படத்தை இயக்குகிறார். 
 

விஸ்வாசம் படத்தை அடுத்து நடிகர் அஜித் போனி கபூர் நிறுவனத்திற்கு இரண்டு படம் நடிப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதில் முதல் படமாக பிங்க் ரீமேக்கில் நடிக்கிறார். இதனை அடுத்து இரண்டாவது படம் எச்.வினோத்தின் சொந்த கதையில் நடிப்பார் என்று சினிமா வட்டரத்தில் சொல்லப்பட்டது. ஆனால், தற்போது அஜித் நடிக்க இருக்கும் அடுத்த படமும் ரீமேக் என்ற ஒரு பேச்சு சினிமா வட்டாரத்தில் ஓடுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவுகிறது. ஆனால், இது தொடர்பாக படக்குழுவோ, அஜித் தரப்போ எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியிடவில்லை.
 

‘ஹெப்தா: த லாஸ்ட் லெக்சர்’ என்ற எகிப்திய படத்தின் உரிமத்தை போனி கபூர் வாங்கியிருக்கிறார். இந்த படத்திலும் அஜித் நடிக்க விருப்பம் காட்டுவதால், பிங்க் ரீமேக்கை அடுத்து அவர் நடிக்க இருக்கும் படமாக இது இருக்க கூடும் என்று சொல்லப்படுகிறது. தற்போது நடித்து வரும் படமும் ரீமேக், அடுத்து அவர் நடிப்பதும் ரீமேக்கா என்று ரசிகர்களை இந்த வதந்தி புலம்பச் செய்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல் ஆளாக ஜனநாயக கடமையாற்றிய அஜித்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Ajith come to the polling station and cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். அதன்படி சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் முதல் ஆளாக வருகை தந்த நடிகர் அஜித் காத்திருந்து பின்பு முதல் ஆளாக வாக்களித்தார்.

Next Story

ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த படத்திற்கு சௌரவ் கங்குலி பாராட்டு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
sourav ganguly praised ajay devgn starring ar rahman musical maidaan movie

அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கன், பிரியாமணி நடித்துள்ள படம் மைதான். இப்படம் இந்திய கால்பந்து ஆட்டம் குறித்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி, 1952 மற்றும் 1962க்கு இடையில் இந்திய கால்பந்தில் பங்காற்றிய சையத் அப்துல் ரஹீமின் கதையை விவரிக்கும் வகையில் உருவாகியுள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவான இப்படம் கடந்த 10ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. 

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, பாராட்டு தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைதளத்தில் அவரது பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் புகழ்பெற்ற கால்பந்து பயிற்சியாளர் சையது அப்துல் ரஹீம் மற்றும் இந்திய கால்பந்தின் பொற்காலத்தின் வசீகரமான சித்தரிப்பான மைதான் படத்தை தவறவிடாதீர்கள். கட்டாயம் பார்க்க வேண்டிய இந்திய ஸ்போர்ட்ஸ் திரைப்படம். இந்திய கால்பந்து நட்சத்திரங்களின் வாழ்க்கையைப் பெரிய திரையில் பார்த்து கண்டுகளியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.