Advertisment

'கர்ணன்' படம் மற்றும் மாரி செல்வராஜ் குறித்து நெகிழ்ந்த தாணு!

thaanu

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. இப்படத்தில், தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். தாணு தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம், ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

இந்த நிலையில், ‘கர்ணன்’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று (31.03.2021) நடைபெற்றது. இயக்குநர் மாரி செல்வராஜ், யோகி பாபு, சந்தோஷ் நாராயணன், தயாரிப்பாளர் தாணு உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Advertisment

நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் தாணு, "காலங்காலமாக வாழ்ந்து மறைந்த இயக்குநர் சான்றோர்கள் எல்லாம் வந்து மாரி செல்வராஜ் வடிவில் இந்தப்படத்தை எடுத்துள்ளார்கள் என்று நினைக்கிறேன். படம் பார்த்துவிட்டு என்னால் வெளியே வர முடியவில்லை. நான் பார்க்குற அத்தனை நல்லோர்களிடத்திலும் இந்தப் படத்தைப் பற்றிச் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். நான் அதிகமாக ஷூட்டிங் ஸ்பாட் செல்வதில்லை. அன்று ஒருநாள் போனேன். நிறைமாத கர்ப்பிணி சம்மந்தப்பட்ட காட்சியை வெயிலில் படமாக்கிக் கொண்டிருந்தார். அன்னைக்குப் பார்த்துட்டு நான் திரும்பி வந்துட்டேன். தம்பி மாரி செல்வராஜ் பற்றி கூறும்போது 'மொத்த சுமையையும் தன்னுடைய தோளில் தாங்கிக்கொள்ளும் சுமை தாங்கி' என்றுதான் அனைவரும் கூறுகிறார்கள். காலங்காலமாக நிலைத்து நிற்கக்கூடிய நான்கு பாடல்களை உருவாக்கியுள்ளார் சந்தோஷ் நாராயணன். படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமையும் பிக்காஸோ ஓவியம் போல தேனி ஈஸ்வர் உருவாக்கியுள்ளார். கலை, எடிட்டிங், மிக்சிங் என எல்லாப் பணிகளும் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன. மாரி செல்வராஜ் கதை சொல்ல ரும் போது கதையைப் புத்தகம் மாதிரி பைண்டிங் செய்து ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கான புகைப்படத்தையும் வைத்துக் கொண்டு வந்தார். அதை என் வீட்டுப் பூஜை அறையில் வைத்துள்ளேன். கர்ணன் ஒரு தெய்வீகமான படைப்பு. அதைக் களங்கப்படுத்தவே முடியாது. வெல்லுவான்... கர்ணன் புகழ் அள்ளுவான்" எனப் பேசினார்.

kalaipuli s thanu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe