Skip to main content

காவல் உதவி ஆய்வாளர் மீது தாடி பாலாஜி புகார்!

Published on 27/08/2020 | Edited on 27/08/2020
thaadi balaji

 

 

பிரபல காமெடி நடிகராக இருக்கும் தாடி பாலாஜி, உதவி ஆய்வாளர் மனோஜ்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். மேலும் அந்தப் புகாரில், தன்னையும் மனைவியையும் திட்டமிட்டு மனோஜ்குமார் பிரிப்பதாக தெரிவித்திருந்தார்.

 

 

இந்தப் புகாரின் அடிப்படையில் ஆகஸ்ட் 13ம் தேதி உதவி ஆய்வாளர் மனோஜ்குமார் மற்றும் நடிகர் தாடி பாலாஜி ஆகிய இருவரும் கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் அதிவீரபாண்டியன் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜராகினர். விசாரணையின்போது உதவி ஆய்வாளர் மனோஜ்குமார் தன்னை நாக்கை துருத்தியும், விரலைக்காட்டி மிரட்டியதாகவும் அப்போதே அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

 

 

இந்நிலையில் உதவி ஆய்வாளர் மனோஜ்குமாரின் இச்செயலுக்கு நடவடிக்கை எடுக்கும்படி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடிகர் தாடி பாலாஜி புகார் அளித்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த தாடி பாலாஜி, "அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி உதவி ஆய்வாளர் மனோஜ்குமார், என்னை மிரட்டுகிறார். துணை ஆணையர் விசாரணையின் போதே என்னை விரலைக் காட்டியும், நாக்கை துருத்தியும் மிரட்டினார்." என்று தெரிவித்துள்ளார்.

 

 

செய்தியாளர்களை சந்தித்த அவர் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி உதவி ஆய்வாளர் மனோஜ்குமார், தன்னை மிரட்டுவதாகவும் துணை ஆணையர் விசாரணையின் போதே தன்னை விரலைக் காட்டியும், நாக்கை துருத்தியும் மிரட்டியதாகவும் கூறினார். மேலும் அனைத்து குற்றச்சாட்டும் போதிய ஆதாரங்களையும் காவல் ஆணையரிடம் சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"ஏன் அவுங்க உயிரோட இருக்காங்க" - முதல்வரிடம் கை கூப்பி கோரிக்கை வைத்த தாடி பாலாஜி

Published on 19/08/2023 | Edited on 19/08/2023

 

thadi balaji about thiruthanai issue

 

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பறைகளின் இரும்பு கதவுகளின் பூட்டுகளில் மர்ம நபர்கள் மனிதக் கழிவை பூசியிருந்தனர். மேலும் குடிநீர் தொட்டியை சேதப்படுத்தியிருந்தனர். இதனை கண்டித்து அங்கிருந்த மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பெற்றோருடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்ப தற்போது நடிகர் தாடி பாலாஜி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "இந்த செய்தியை கேட்கும் போது உடம்பே கூசுது. இதுங்க என்ன ஜென்மம். இதுங்க எல்லாம் ஏன் உயிரோட இருக்காங்கனு புரியவில்லை. நீங்க அந்த பள்ளியில் படிச்சிருக்கலாம். அல்லது உங்க குழந்தை அந்த பள்ளியில் படிக்கலாம். 

 

யாரா வேண்டுமானாலும் இருக்கட்டும். குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் இப்படி பண்ணியிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம், 6 அறிவு உள்ளவர்களா இல்லை 5 அறிவு உள்ள மிருகமா. இதெல்லாம் எவ்வளவு கேவலமான விஷயம். எவ்ளோ பெரிய தப்பு. குழந்தைகளுடைய படிப்பு கெடுது. இன்றைய சூழலில் அரசு பள்ளிகள் சிறந்த பள்ளி என்று நிறைய இடத்தில நானே பேசியிருக்கிறேன். கண்கூடாக பார்த்திருக்கிறேன். 

 

முதலில் ஒரே ஒரு விஷயம் நினைச்சிக்கங்க. நம்ம முதல்வர் மு.க ஸ்டாலின், ஒரு குழந்தை சாதிச்சது என்றால், தான் சாதித்தது போல் அக்குழந்தையை அழைத்து கொண்டு பாராட்ட கூடிய நல்ல மனம் கொண்ட மனிதர் அவர். இந்த சூழலில் இப்படி நீங்கள் பண்ணினால் எவ்ளவு கேவலமா இருக்கு. இது எவ்ளோ பெரிய தவறு. நான் முதல் முறையாக தமிழக முதலமைச்சரை கை கூப்பி கேட்டுக்கொள்கிறேன். இந்த சம்பவத்துக்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேல் இது போன்ற குற்றங்கள் நடக்க கூடாது. அதுவும் உங்க ஆட்சியில் நடக்க கூடாது. 

 

அந்த பள்ளி தலைமை ஆசிரியருக்கும், பணிபுரிந்த ஆசிரியர்களுக்கும், படிக்கும் குழந்தைகளுக்கும் என்னுடைய சப்போர்ட் எப்போதுமே இருக்கும். விரைவில் அந்த பள்ளிக்கு நேரடியாக வந்து பார்க்கிறேன்" என்றார்.   
 

 

 

Next Story

"அரசியலில் நுழைகிறேன்" - தாடி பாலாஜி பேட்டி

Published on 12/05/2023 | Edited on 12/05/2023

 

thadi balaji about his political entry

 

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி முடிவடைந்தது. இதற்கான முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியான நிலையில் திண்டுக்கல் மாவட்டம் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொருளியல் பாடப்பிரிவில் படித்து தேர்வு எழுதிய நந்தினி என்ற மாணவி 600க்கு 600 எடுத்து வரலாற்றுச் சாதனை படைத்தார். மேலும் தமிழ் பாடத்தில் நந்தினியை தவிர்த்து லக்‌ஷயாஸ்ரீ என்ற மாணவி நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று பலரது கவனத்தை ஈர்த்தார். 

 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள தனம் பச்சையப்பன் மெட்ரிக் பள்ளியில் படித்த லக்‌ஷயாஸ்ரீக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். அந்த வகையில் நடிகர் தாடி பாலாஜி மாணவியை ஃபோனில் அழைத்துப் பாராட்டிய நிலையில் மாணவியின் இல்லத்திற்கு சென்று நேரில் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மாணவியின் பெயரில் லட்சியம் இருக்கிறது. கண்டிப்பாக அவரது லட்சியம் நிறைவேறும் என்று நினைக்கிறேன். அவரது மேற்படிப்புக்கு என்னால் இயன்ற உதவியை செய்வதாக உறுதியளித்திருக்கிறேன். தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று பலரும் சொல்லி வரும் சூழலில் தமிழில் நூற்றுக்கு நூறு எடுத்த லக்‌ஷயாவை பாராட்டுவது எனக்கு பெருமையாக உள்ளது" என்றார். 

 

மேலும், "பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நிறைய நல்ல திட்டங்களைக் கொண்டு வருகிறார். குறிப்பாக நம்முடைய முதலமைச்சர் முழு மூச்சோடு இருக்கிறார். இந்த வாய்ப்பை மாணவ மாணவிகள் பயன்படுத்தி அடுத்தகட்டத்திற்கு போக வேண்டும் என்று விரும்புகிறேன்" என்றார். அப்போது அரசியல் வருகை குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த தாடி பாலாஜி, "நான் முன்பு சொன்னது போல விரைவில் வருவேன். வந்தால் கண்டிப்பாக நிறைய நல்லது பண்ணுவேன். கூடிய விரைவில் அதை முறையாக அறிவிப்பேன். தனியாக கட்சி ஆரம்பிக்கும் ஐடியா இல்லை. எனக்கான ஒரு சின்ன அங்கீகாரம் கிடைக்கும் கட்சியில் பணியாற்றத் தயாராகவுள்ளேன்" என்றார். 

 

பாலாஜி, நித்யா என்பவரை திருமணம் செய்து பின்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார். நித்யா அண்மையில் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.