ஊரடங்கு உத்தரவு இந்தியா முழுவதும் அமலில் இருக்கும்நிலையில்தனியாகஅபார்ட்மெண்டில் வசித்து வந்த நடிகை மர்மமானமுறையில் மரணமடைந்திருப்பது அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

telungu

Advertisment

ஆந்திராவை சேர்ந்த, பிரபலதெலுங்கு சின்னத்திரை நடிகையும், தொகுப்பாளினியுமான சாந்தி தனது அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று வியாழக்கிழமை இறந்து கிடந்துள்ளார். ஹைதராபத்தில் எல்லா ரெட்டிகுடாவில் இன்ஜினியர் காலனி அடுக்கு மாடி குடியிருப்பில் அவர் தனியாக வசித்து வந்துள்ளார்.

அவருடைய வீட்டிலிருந்து சந்தேகத்திற்கு உரிய வகையில் சத்தம் கேட்பதாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்குஅளித்ததவலின்படி, வீட்டிற்குவந்து பார்த்தபோதுசாந்தி மர்மமான முறையில் இறந்துகிடந்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிரவிசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.