Skip to main content

தனியாக வசித்து வந்த நடிகை... மர்மமான முறையில் மரணம்!

Published on 10/04/2020 | Edited on 10/04/2020

ஊரடங்கு உத்தரவு இந்தியா முழுவதும் அமலில் இருக்கும் நிலையில் தனியாக அபார்ட்மெண்டில் வசித்து வந்த நடிகை மர்மமான முறையில் மரணமடைந்திருப்பது அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. 

  telungu


ஆந்திராவை சேர்ந்த, பிரபல தெலுங்கு சின்னத்திரை நடிகையும், தொகுப்பாளினியுமான சாந்தி தனது அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று வியாழக்கிழமை இறந்து கிடந்துள்ளார். ஹைதராபத்தில் எல்லா ரெட்டிகுடாவில் இன்ஜினியர் காலனி அடுக்கு மாடி குடியிருப்பில் அவர் தனியாக வசித்து வந்துள்ளார். 

அவருடைய வீட்டிலிருந்து சந்தேகத்திற்கு உரிய வகையில் சத்தம் கேட்பதாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு அளித்த தவலின்படி, வீட்டிற்கு வந்து பார்த்தபோது சாந்தி மர்மமான முறையில் இறந்துகிடந்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஈடு செய்ய முடியாத இழப்பு’ - முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

Published on 15/11/2022 | Edited on 15/11/2022

 

 'Irreparable loss'-MK Stalin's tweet

 

தெலுங்கு திரையுலகில் பிரபலம் வாய்ந்த பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா காலமானார். 80 வயதான கிருஷ்ணா இதுவரை 325 திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையாவார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு நடிகர் கிருஷ்ணா காலமானார்.

 

ஏற்கனவே நடிகர் கிருஷ்ணாவின் மூத்த மகன் ரமேஷ்பாபு இந்த ஆண்டு ஜனவரி மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார் என்பதும், அதேபோல அவரது மனைவி இந்திராதேவி வயது மூப்பு காரணமாக ஒன்றரை மாதங்களுக்கு முன்புதான் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பழம்பெரும் நடிகர் உயிரிழப்பால் தெலுங்கு ரசிகர்கள், திரையுலகப் பிரபலங்கள் சோகத்தில் உள்ளனர்.

 

 'Irreparable loss'-MK Stalin's tweet

 

பல்வேறு பிரபலங்களும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், 'பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணா மறைவு வேதனை அளிக்கிறது. கிருஷ்ணாவை இழந்து வாடும் மகேஷ்பாபு மற்றும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். நடிகர் கிருஷ்ணாவின் மறைவு இந்தியத் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு' எனத் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Next Story

பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணா காலமானார்

Published on 15/11/2022 | Edited on 15/11/2022

 

Legendary Telugu actor Krishna passed away

 

தெலுங்கு திரையுலகில் பிரபலம் வாய்ந்த பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா காலமானார். 80 வயதான கிருஷ்ணா இதுவரை 325 திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையாவார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு நடிகர் கிருஷ்ணா காலமானதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

 

உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் கிருஷ்ணா ஹைதராபாத்தில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு அவசர சிகிச்சைப் பிரிவில் சிபிஆர் சிகிச்சை கொடுக்கப்பட்டது. பின்னர் வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவர்கள் கிருஷ்ணாவின்  உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டு வந்தனர்.

 

இந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே நடிகர் கிருஷ்ணாவின் மூத்த மகன் ரமேஷ்பாபு இந்த ஆண்டு ஜனவரி மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார் என்பதும், அதேபோல அவரது மனைவி இந்திராதேவி வயது மூப்பு காரணமாக ஒன்றரை மாதங்களுக்கு முன்புதான் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பழம்பெரும் நடிகர் உயிரிழப்பால் தெலுங்கு ரசிகர்கள், திரையுலகப் பிரபலங்கள் சோகத்தில் உள்ளனர்.