Skip to main content

எஸ்.பி.பி மறைவு... தெலுங்கு முன்னணி நடிகர்கள் இரங்கல்!

Published on 26/09/2020 | Edited on 26/09/2020
spb

 


பிரபல பாடகர் எஸ்.பி.பி-யின் மறைவிற்கு பல பிரபலங்கள் தங்களின் இரங்கலை ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி பிரபலங்கள் எஸ்.பி.பிக்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்ட பதிவுகளின் தொகுப்பு. 

 

மகேஷ் பாபு: எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் மறைந்துவிட்டார் என்ற உண்மையை என்னால் ஏற்க முடியவில்லை. அவரது ஆத்மார்த்தமான குரலுக்கு ஈடாக எதுவும் கிடையாது. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்துக்கு மனமார்ந்த இரங்கல்கள் மற்றும் ஆறுதல்கள்

 

சிரஞ்சீவி: இசை உலகுக்கு மிக இருண்ட நாள். எஸ்பி பாலு போன்ற, ஈடு இணையில்லாத இசை மேதையின் மறைவோடு ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. தனிப்பட்ட முறையில் எனது வெற்றிக்கு, எனக்காக எண்ணற்ற, மறக்க முடியாத பாடல்களைப் பாடிய பாலு அவர்களின் குரலுக்கு நான் அதிகக் கடன்பட்டிருக்கிறேன்.

 

இன்னொரு சகாப்தமான கண்டசாலாவுக்குப் பிறகு யார் வருவார்கள் என்று இசை உலகம் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கும் போது எஸ்பிபி வடிவில், இசை உலகுக்கு மிகப் பிரகாசமான நட்சத்திரம் வந்தது. அவரது மென்மையான குரல் மொழி, கலாச்சார எல்லைகளைத் தாண்டியது, இந்தியா முழுவதும் பல ரசிகர்களைப் பல வருடங்கள் கட்டிப்போட்டது. மீண்டும் இன்னொரு எஸ்பிபி வரவே முடியாது. அவரே தான் மீண்டும் பிறந்து வந்து வெற்றிடத்தை நிரப்ப வேண்டும். அவரது இழப்பால் நொறுங்கிப் போயிருக்கிறேன். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் பாலு அவர்களே

 

அல்லு அர்ஜுன்: சகாப்தம் எஸ்பி பாலசுப்பிரமணியம் இன்று நம்மை விட்டு மறைந்துவிட்டார் என்பது தெரிந்து ஆழ்ந்த வருத்தத்தில் இருக்கிறேன். ஆனால், அவர் குரல் என்றும் கேட்கப்படும், நினைக்கப்படும். நம் வாழ்வில் கொண்டாடப்படும். இந்திய சினிமாவில் மிக உயர்ந்த ஆளுமைகளில் ஒருவர். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். என்றும் அவருக்கான மரியாதை இருக்கும்.

 

நானி: இந்த இதயம் பல லட்சம் பாடல்களாக நொறுங்கிவிட்டன. என் மகனைப் படப்பிடிப்புக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று மனைவியைச் சொன்னது ஒரே ஒரு முறைதான். பாலுவுடன் நான் படப்பிடிப்பில் இருக்கும் போது என் மகன் அந்த சகாப்தத்துடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னேன். அவர் இசை வாழும் வரை அவர் கொண்டாடப்படுவார்.

 

ரவிதேஜா: எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இந்தியக் குடும்பங்களில் ஒரு அங்கம். அவரது குரலும், இசைக்கு அவரது பங்காற்றலும் என்றும் நீடித்திருக்கும். ஒவ்வொரு மனித உணர்ச்சிக்கும் பாடல்கள் பாடியிருக்கும் அந்த சகாப்தத்தின் ஆன்மா சாந்தியடையட்டும். உங்கள் இழப்பை என்றும் உணர்வோம்.

 

ஜுனியர் என்.டி.ஆர்: இந்திய இசை அதற்கு மிகவும் பிடித்த மகனை இழந்துவிட்டது. நொறுங்கிப் போயிருக்கிறேன். ஐம்பது வருடங்களைத் தாண்டிய ஒரு இசை சகாப்தம் எஸ்பிபி. 40,000 பாடல்களுக்கு மேல் உயிர் கொடுத்திருக்கிறார். இந்த உலகில் இசை இருக்கும் வரை நீங்கள் வாழ்வீர்கள் சார்.

 

வெங்கடேஷ்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவைப் பற்றிய செய்தி கேட்டு அதிக வருத்தமடைந்தேன். நாம் இன்று ஒரு சாதனையாளரை இழந்திருக்கிறோம். ப்ரேமா, பவித்ரா பந்தம் உள்ளிட்ட எனது சிறந்த படங்களில் அவரோடு பணியாற்றும் பெருமை எனக்குக் கிடைத்தது. நீங்கள் விட்டுச் சென்ற மரபு என்றும் வாழும் சார். அவரது குடும்பத்துக்கு என் மனமார்ந்த அனுதாபங்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மன்னிப்பு கேட்க வேண்டும்” - இசையமைப்பாளருக்கு எஸ்.பி.பி. மகன் நோட்டீஸ்

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
SPB al issue sp charan send legal notice to music diector

ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் நல்ல விஷயங்களும் கெட்ட விஷயங்களும் அரங்கேறி வருகிறது. ராஷ்மிகா, கஜோல் உள்ளிட்ட நடிகைகளின் டீப் ஃபேக் வீடியோ வெளியாகி சர்ச்சையானது. அதே சமயம் மறைந்த பாடகரின் குரல்களை ஏஐ மூலம் மீண்டும் கொண்டு வந்து பலரையும் நெகிழ்ச்சியடைய செய்தது. அந்த வகையில் ஏ.ஆர். ரஹ்மான், லால் சலாம் படத்தில் மறைந்த பின்னணி பாடகர்களான ஷாகுல் ஹமீத் மற்றும் பம்பா பாக்கியா ஆகியோரின் குரல்களை, 'திமிறி எழுடா' பாடலில் பயன்படுத்தியிருந்தார். 

அவர்களின் குரலை ஏ.ஐ. மூலம் பயன்படுத்தியதற்காக, அவர்களின் குடும்பத்தாரிடம் முறையான அனுமதி பெற்றுள்ளோம். மேலும் அதற்குத் தகுந்த சன்மானமும் கொடுத்துள்ளோம் என ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் குரலை ஏ.ஐ. மூலம் ‘கீடா கோலா’ என்ற தெலுங்கு இசையமைப்பாளர் விவேக் சாகர் பயன்படுத்தியுள்ளார். இதை உறுதி செய்யும் விதமாக ஒரு பேட்டியிலும் அதை ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் அவர் எஸ்.பி.பி குடும்பத்தாரிடம் முறையாக அனுமதி வாங்கவில்லை என அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனை எஸ்.பி.பியின் மகன் எஸ்.பி. சரண் அனுப்பியுள்ளார். 

அவர் நோட்டீசில் குறிப்பிட்டிருப்பதாவது, “எந்தவொரு தொழில்நுட்பமும் மனித குலத்திற்கு பயனளிக்க வேண்டுமே தவிர வாழ்வாதாரத்தை பறிக்கக் கூடாது. அவரது குரல் இந்த வகையில் பயன்படுத்தப்படுகிறது மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால், இது எங்களிடம் அனுமதி பெறாமல் பயன்படுத்தப்படுவது வேதனையான விஷயம். முறையான அனுமதி பெறாமல் எனது தந்தையின் குரலைப் பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். நஷ்ட ஈடு மற்றும் ராயல்டியில் பங்கு வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“எஸ்.பி.பி என்பது பொதுச் சொத்து” - எஸ்.பி.பி. சரண்

Published on 25/09/2023 | Edited on 25/09/2023

 

sp charan about spb

 

இசையுலகில் தனது இனிமையான குரல் மூலம் இன்றும் ரசிகர்கள் மனதில் இருப்பவர் மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இன்றுடன் அவர் மறைந்து 3 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், அவரது மகன் எஸ்.பி.பி. சரண், திருவள்ளூர் பொன்னேரியில் உள்ள பாலசுப்ரமணியம் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். 

 

பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "இத்தனை வருஷங்கள் அப்பாவை வாழ வைத்த, அவரது பாடல்கள் மூலம் வாழவைத்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி. அப்பாவுக்காக நான் என்ன செய்ய முடியுமோ அதை செய்து கொண்டிருக்கிறேன். அதை முடித்துவிட்டு அரசிடம் போகவுள்ளேன். ரசிகர்களின் ஆசைப்படி அரசாங்கம் மணிமண்டபம் கட்டினால் நல்லது தான். நேரடியாக அரசிடம் போய், மணிமண்டபத்துக்கு தொகை கொடுங்க என்று நான் கேட்பது சரியாக இருக்காது" என்றார். 

 

அப்போது எஸ்.பி.பியின் பாடல்களை அரசுடைமையாக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "எங்கிட்டே அப்படி யாரும் சொன்னதில்லை. அதெல்லாம் தேவையில்லை. யார் வேண்டுமானாலும் பாடலாம். எஸ்.பி.பி என்பது பொதுச் சொத்து. எல்லாரும் கேட்டு மகிழுங்கள்" என்றார்.