Skip to main content

தெலுங்கு சினிமாவில் தமிழ் நடிகர்கள் இனி நடிக்கக் கூடாது .... சங்கத்தில் ஒரு சாரார் எதிர்ப்பு...

Published on 04/11/2019 | Edited on 05/11/2019

சமீபமாக தெலுங்கு திரைப்பட உலகில் தமிழ் திரைப்பட நடிகர்கள் ஆதிக்கம் செலுத்தி வருவதாக அங்கிருக்கும் துணை நடிகர்களிடம் இருந்து குற்றச்சாட்டு எழுந்துகொண்டே இருந்தது. இந்நிலையில் இந்த விஷயம் குறித்து தெலுங்கு நடிகர் சங்கத்தில் இருக்கும் ஒரு குழு , தெலுங்கு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஒரு மனு ஒன்றை அளித்துள்ளது.
 

vijay sethupathi

 

 

அதில், “ தெலுங்கு திரைப்பட உலகில் மற்ற மொழி நடிகர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் அதிக வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. இதனால் தெலுங்கு குணச்சித்திர நடிகர்களும், துணை நடிகர்களும் வாய்ப்புகள் குறைகின்றன. அவர்கள் வருமானம் இன்றி தங்களின் வீட்டு வாடகையை கூட கட்ட முடியாமல் தவிக்கின்றனர்.

ரஜினிகாந்த், விஜய், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட தமிழ் நடிகர்களின் படங்கள் தமிழ்நாட்டில் ரிலீஸாகும் நாளிலேயே தெலுங்கிலும் ரிலீஸ் ஆகிறது. அதில் சில படங்கள் தமிழ்நாட்டில் தோல்வி அடைந்தாலும் கூட தெலுங்கில் ஹிட் அடிக்கிறது. தமிழ் படங்கள் ஆந்திராவில் ஓடவேண்டும் என்று ஆந்திர நடிகர்களை அவர்கள் நடிக்க வைப்பதில்லை. ஆனால், தெலுங்கு நடிகர்களோ தங்களின் படங்கள் மற்ற தென்னிந்திய மொழிகளில் வியாபாரம் ஆக வேண்டும் என்பதற்காக அந்தந்த மொழி நடிகர்களை நடிக்க வைக்கின்றனர்.

சத்யராஜ், விஜய் சேதுபதி, பிரபு, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட தமிழ் நடிகர்களையும் சுதீப், ரவிகிஷன் உள்ளிட்ட கன்னட நடிகர்களையும் தெலுங்கு படங்களில் நடிக்க வைக்கின்றனர். பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் சாஹோ, இந்த படத்தில் அவரை தவிர மற்றவர்கள் யாரும் தெலுங்கு நடிகர்கள் இல்லை. அதேபோல சைரா நரசிம்மரெட்டி படத்திலும் சிரஞ்சீவிவை தவிர மற்ற அனைவரும் பிற மொழி நடிகர்கள்தான் அதிகமாக இருந்தனர்.
 

miga miga avasaram


ஹீரோ கதாபாத்திரத்தை தவிர தந்தை, தாய், அண்ணி, தங்கை கதாபாத்திரங்களில் நடிக்க பிறமொழி நடிகர்களையே அழைக்கின்றனர். அவர்களுக்கு கேரவன், நட்சத்திர ஓட்டலில் ரூம், அதிக சம்பளம் கொடுக்கின்றனர். இதனால்தான் அவர்கள் தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். தெலுங்கு படங்களில் தெலுங்கு நடிகர்களுக்கே வாய்ப்பு அளிக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளனர். 

பாகுபலி படத்திற்கு பின் சத்யராஜுக்கு அதிக வாய்ப்பு தெலுங்கில் இருக்கிறது. இதுபோல சைரா படத்திற்கு பின் விஜய் சேதுபதிக்கு பல வாய்ப்புகள் வந்த வண்ணம் இருப்பதாக தெலுங்கு வட்டாரங்களில் சொல்லப்படுகிறது குறிப்பிடத்தக்கது. 
 

சார்ந்த செய்திகள்

Next Story

‘காதலே காதலே...’ - ‘96’ பட ரசிகர்களுக்கு குட் நியூஸ்

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
vijay sethupathi trisha 96 movie re released

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் பிரேம் குமார் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் 96. மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றது. படமும் காதலர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரிதும் கொண்டாடப்பட்டது. மேலும் விமர்சன ரீதியாகவும் பாராட்டைப் பெற்றது. 

இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியானது. அதன் பிறகு தற்போது வரை எந்த அப்டேட்டும் வரவில்லை. இந்த நிலையில் இப்படம் தற்போது ரீ ரிலீஸாகவுள்ளது. காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழக அளவில் இப்படம் ரீ ரிலீஸாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் இப்பட ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.  

Next Story

5 நிமிடம் நிற்காத கைதட்டு - சர்வதேச அரங்கில் ‘விடுதலை’க்கு பாராட்டு

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
viduthalai get standing ovation in Rotterdam Film Festival

53வது ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழா, கடந்த ஜனவரி 25 தேதி தொடங்கி வருகிற பிப்ரவரி 4 வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில், பல்வேறு நாடுகளிலிருந்து திரைப்படங்கள் தேர்வாகியுள்ளன. அந்த வகையில், பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில் ராம் இயக்கியுள்ள 'ஏழு கடல் ஏழு மலை' தேர்வாகியது. இப்படம் இன்னும் வெளிவராத நிலையில் முதல் முறையாக அங்கு கடந்த 30ஆம் தேதி திரையிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்த விழாவின் லைம்லைட் பிரிவில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ மற்றும் வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை பாகம் 1’ படமும் தேர்வாகியது. மேலும் விடுதலை இரண்டாம் பாகமும் இதில் ப்ரீமியர் செய்யப்பட தேர்வாகியது. அதன்படி ‘விடுதலை பாகம் 1’ நேற்று (31.02.2024) திரையிடப்பட்டது. படம் முடிந்தவுடன் திரையரங்கில் அமர்ந்திருந்த அனைவரும், எழுந்து நின்று 5 நிமிடம் கைதட்டி பாராட்டு தெரிவித்துள்ளனர். இதை தமிழகத்தில் இப்படத்தை வெளியிட்ட ரெட் ஜெயண்ட் நிறுவனம் எக்ஸ் தளத்தில் தெரிவித்து, அது தொடர்பான வீடியோவையும் பகிர்ந்துள்ளது. விடுதலை இரண்டாம் பாகம் வருகிற 3ஆம் தேதி திரையிடப்படவுள்ளது.

விடுதலை படத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எல்ரெட் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாகம் 1 கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் இந்தாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.