teejay

நடிகர் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படத்திற்கு 'பத்து தல' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பணிகள் பெருமளவு நிறைவடைந்த நிலையில், சிம்பு நடிக்கவுள்ள அடுத்த படம் எது என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

Advertisment

இந்நிலையில், பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் நிறுவனம், நடிகர் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கவுள்ள படம் குறித்த அப்டேட் ஒன்றை வெளியிட்டது. அதில், இது ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் 20-ஆவது படம் என்றும் இப்படத்தை ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கவுள்ளார் என்றும் இப்படத்தின் பெயர் ‘பத்து தல’ என்றும் அறிவித்திருந்தது.

மேலும் இப்படத்தில் ‘அசுரன்’ புகழ் டீஜே அருணாச்சலம் இணைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து டீஜே பதிவிடுகையில், “எனக்குப் பிடித்த 90-ஸ் ஹீரோக்களில் ஒருவரான சிம்புவுடன் இணைந்துப் பணியாற்ற வேண்டும் என்ற கனவு தற்போது நிறைவேறி இருக்கிறது” என்று கூறியுள்ளார்.