Skip to main content

“செருப்பை வீசவும், அவமானப்படுத்தவும் உரிமையில்லை...”- ‘டீம் கங்கனா’ பதிலடி!

Published on 10/07/2020 | Edited on 10/07/2020
kangana ranaut

 

சுசாந்தின் தற்கொலையை தொடர்ந்து பாலிவுட்டில் நடைபெறும் வாரிசு திணிப்பு குறித்த விவாதம் நாளுக்கு நாள் சமூக வலைதளத்தில் அதிகரித்துகொண்டே வருகிறது. அதிகாரம் மற்றும் பணம் மிக்கவர்களின் வாரிசுகள் வெளியிலிருந்து வரும் திறமையாளர்களின் வாய்ப்புகளை தட்டி பறித்துவிடுகின்றனர் என்பதே பலருடைய குற்றச்சாட்டாக இருக்கிறது.

இந்நிலையில் பிரபல இயக்குனரான மகேஷ் பட்டின் மகள், பூஜா பட் வாரிசு அரசியல் தொடர்பாக ட்வீட் செய்துள்ளார். அதில், “மக்கள் பரபரப்பாக விவாதித்துக் கொண்டிருக்கிற வாரிசு அரசியல் பற்றி கருத்து சொல்லும்படி என்னிடம் சிலர் கேட்கின்றனர். ஒட்டுமொத்த திரைத்துறையை காட்டிலும் ஏராளமான புதிய திறமையான நடிகர்களையும், இசையமைப்பாளர்களையும், தொழில்நுட்பக் கலைஞர்களையும் அறிமுகப்படுத்திய ஒரு குடும்பத்திலிருந்து வந்த ஒரு பெண்ணாக, என்னால் இதற்கு சிரிக்க மட்டுமே முடிகிறது. உண்மைகள் யாருக்கும் சென்றடைவதில்லை. மாறாக புனைவுகளே அதிகமாக சேர்கின்றன.

பட் குடும்பத்தினர் பிரபலமான நடிகர்களுக்கு எதிராக இருப்பதாக குற்றச்சாட்டுகளும், புதியவர்களை மட்டுமே அறிமுகப்படுத்தி அவர்களோடு பணிபுரிந்ததால் ஒதுக்கப்பட்ட காலம் என்ற ஒன்றும் இருந்தது. இன்று அதே மக்கள் வாரிசு அரசியல் செய்கிறார்களா என கேட்கின்றனர். கூகிள் செய்து பார்த்துவிட்டு ட்வீட் செய்யுங்கள் நண்பர்களே. யோசித்துப் பேசுங்கள் என்று கூட சொல்லப் போவதில்லை.

கங்கனாவை பொறுத்தவரை அவர் ஒரு மிகச்சிறந்த நடிகை, இல்லையென்றால் அவர் 'கேங்ஸ்டர்' படத்தில் அவர் விஷேஷ் பிலிம்ஸ் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்க மாட்டார். ஆம், அனுராக் பாசு தான் அவரை கண்டுபிடித்தார், ஆனால் விஷேஷ் பிலிம்ஸ் அவருக்கு உறுதுணையாக நின்று படத்துக்கு முதலீடு செய்தது. இது சாதாரண விஷயம் அல்ல. அவருடைய எல்லா முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம்" என்று தெரிவித்திருந்தார். 

இதுகுறித்து கங்கனாவின் அதிகாரபூர்வக் அக்கவுண்டான ‘டீம் கங்கனா’ என்ற ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

“அன்புள்ள பூஜா, அனுராக் பாசு கங்கனாவின் திறமையைக் கண்டறிந்தார். நடிகர்களுக்குச் சம்பளம் கொடுப்பதை முகேஷ் பட் விரும்புவதில்லை என்பது அனைவருக்கும் தெரியும். பெரும்பாலான தயாரிப்பு நிறுவனங்கள் திறமையானவர்கள் இலவசமாக கிடைக்க வேண்டும் என்று நினைக்கின்றன. ஆனால் அதற்காக உங்கள் தந்தை மகேஷ் பட்டுக்கு கங்கனாவின் மீது செருப்பை வீசவும், அவரை ‘பைத்தியம்’ என்று அழைக்கவும், அவரை அவமானப்படுத்தவும் உரிமையில்லை. கங்கனாவை ஒரு துயரமான முடிவு என்று அவர் அறிவித்தார். ஏன் சுஷாந்த் மற்றும் ரியா காதலில் அவர் தலையிட்டார், இவையெல்லாம் நீங்கள் அவரிடம் கேட்கவேண்டிய கேள்விகள்” என்று பதிவிட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜூன் மாதத்தைக் குறிவைத்த கங்கனா ரணாவத்

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
kangana ranaut Emergency  release date update

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் தற்போது 'எமர்ஜென்சி' படத்தை நடித்து இயக்கியும் உள்ளார். இப்படம் இந்திய முன்னாள் பிரதமர் மறைந்த இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தின் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை கங்கனாவே தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் அனுபம் கெர், சதீஷ் கௌசிக், பூமிகா சாவ்லா, ஷ்ரேயாஸ் தல்படே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
 
இப்படம் கடந்த நவம்பர் 24 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக தெரிவித்து ஒரு வீடியோவை படக்குழு வெளியிட்டது. பின்பு இப்படம் தள்ளிப் போகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இப்படத்தின் புது ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி, வருகிற ஜூன் 14ஆம் தேதி இப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

Next Story

“பில்கிஸ் பானு வாழ்க்கையை ஆராய்ச்சி செய்து ஸ்கிரிப்ட் வைத்திருந்தேன்” - கங்கனா

Published on 09/01/2024 | Edited on 09/01/2024
kangana about bilkis bano biography

கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் கோத்ரா கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து அவரின் மூன்று வயது குழந்தையைக் கொலை செய்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். பின்பு நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 11 குற்றவாளிகளும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர்களை குஜராத் அரசாங்கம், சிறப்புக் குழுவின் பரிந்துரையின்படி நன்னடத்தை அடிப்படையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது.

மேலும் அவர்கள் விடுதலையின்போது சிறை வாசலிலேயே மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு கொடுத்தது, பெரும் சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து, குற்றவாளிகள் 11 பேரும் தண்டனைக் காலம் முடிவதற்குள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த 8ஆம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில், 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுவதாக தீர்ப்பு வந்தது. 

இந்த தீர்ப்பை தொடர்ந்து, பில்கிஸ் பானு வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க கங்கனா ரணாவத்திற்கு ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார். எக்ஸ் பக்கத்தில், கங்கனாவை டேக் செய்து பதிவிட்ட அந்த நபர், “பெண்கள் அதிகாரமடைவது பற்றிய உங்கள் ஆர்வம் ஊக்கமளிக்கிறது. அதனால் பில்கிஸ் பானு வாழ்கையை ஒரு அழுத்தமான திரைப்படமாக எடுக்க உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா?. இதை பில்கிஸ்பாவிற்காவோ, பெண்ணியத்திற்காகவோ அல்லது குறைந்த பட்சம் மனிதநேயத்திற்காகவாவது செய்வீர்களா” என குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளார். 

இதற்கு பதிலளித்த கங்கனா, “இந்தக் கதையை உருவாக்க வேண்டும் என்று ஆராய்ச்சி செய்து மூன்று வருடம் உழைத்து, ஸ்கிரிப்ட் தயார் செய்து வைத்திருந்தேன். ஆனால் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் உள்ளிட்ட சில நிறுவனங்கள், அரசியல் ரீதியான படங்களை தாங்கள் எடுப்பதில்லை என வரையறை வைத்துள்ளோம் என பதிலளித்துவிட்டனர். மேலும் ஜியோ சினிமாஸ், நான் பிஜேபியை ஆதரிப்பதாக கூறி என்னுடன் பணிபுரிய மாட்டோம் என கூறினர். ஜீ நிறுவனம் வேறொரு நிறுவனத்துடன் இணையப் போகிறது. எனக்கு வேறு என்ன வழி இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.