Skip to main content

சுஷாந்த் குறித்து சர்ச்சையை கிளப்பிய டாப்ஸி! 

Published on 10/09/2020 | Edited on 10/09/2020
tapsee

 

 

கடந்த ஜூன் 14ஆம் தேதி சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டார். இதனை தொடர்ந்து பாலிவுட்டில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளது. தற்போது சுஷாந்தின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. சுஷாந்தின் காதலியான ரியாவை போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இந்நிலையில் சுஷாந்திற்கு ஆதரவாக ஒரு கூட்டமும், நடிகை ரியாவுக்கு ஆதரவாக ஒரு கூட்டமும் சமூக வலைதளத்தில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 

 

ரியாவின் கைது பற்றி பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவிக்கையில், நடிகை டாப்ஸி போட்ட ட்வீட் சர்ச்சையை கிளப்பி உள்ளது. நடிகை ரியா தான் சுஷாந்துக்கு தெரியாமல் போதைப்பொருளை, தேநீரில் கலந்து கொடுத்தார் என்ற தகவல்கள் சமீபத்தில் கசிந்தன. ஆனால், அதனை மறுத்துள்ள நடிகை டாப்ஸி, இந்நேரம் சுஷாந்த் சிங் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் அவர் தான் சிறையில் இருந்திருப்பார் என பதிவிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்