ADVERTISEMENT

சமந்தாவின் கவர்ச்சி பாடலுக்கு தமிழ்நாட்டிலும் எதிர்ப்பு !

12:33 PM Dec 14, 2021 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிவரும் படம் 'புஷ்பா'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, ஃபகத் பாசில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வரும் டிசம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நடிகை சமந்தா, ‘புஷ்பா’ படத்தில் ‘ஓ சொல்றியா..' என்ற குத்து பாடலுக்கு நடனமாடியுள்ளார். இப்பாடலின் லிரிக்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில், சமந்தா நடனமாடிய இப்பாடலுக்கு தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 'புஷ்பா’ படத்தின் 'ஓ சொல்றியா..' பாடல் வரிகள் ஆண்களை மிகவும் கொச்சைப்படுத்தும் வகையில் இருப்பதாகவும், சிறுவர் மற்றும் இளைஞர்களை மனரீதியாகப் பாதிக்கும் என கூறியுள்ள ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் அருள்துமிலன், இப்பாடலைத் தடை செய்யாவிட்டால் படக்குழுவினர் மீது வழக்கு தொடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த ஆண்கள் அமைப்பு இப்பாடலுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT