Tamil Nadu government has given compensation of Rs.8 crore to t Rajender

சினிமாவில் இயக்குநர் நடிகர் எனப் பல்வேறு துறைகளில் பணியாற்றிய டி. ராஜேந்தர் வேலூரில் திரையரங்கம் ஒன்றை நடத்தி வருகிறார். அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகக் கூறி அங்கு மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

Advertisment

இதற்கான பணி மேற்கொள்ளப்பட்ட நிலையில் மேம்பாலம் கட்ட டி. ராஜேந்தரின் திரையரங்கம் இருக்கும் இடத்தில் இடம் தேவைப்பட்டது. இது தொடர்பாக அவருக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டது. இதையடுத்து டி. ராஜேந்தர் வேலூர் பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு நேரில் சென்று 527 சதுர மீட்டர் நிலத்தை மேம்பாலம் கட்ட கிரயம் செய்து கொடுத்தார். இதற்காக அரசு சார்பில் அவருக்கு 8 கோடியே 15 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படவுள்ளது.

Advertisment