Advertisment

"ஒவ்வொரு முறை சென்னை வரும்போதும்..." - நடிகர் ராம்சரண் நெகிழ்ச்சி!

Ramcharan

ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆர்.ஆர்.ஆர்.’ இப்படம் ஜனவரி 7ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (10.12.2021) இரவு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர் ராஜமௌலி, நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், நடிகை ஆலியா பட் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு, பத்திரிகையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="1a5853e5-3a8e-4e78-a360-aa0f0d28cd02" height="321" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/ik-ad_19.jpg" width="535" />

Advertisment

நிகழ்வில், தமிழில் டப்பிங் பேசிய அனுபவம் குறித்து நடிகர் ராம் சரணிடம் கேட்கையில், “மொத்த படத்திற்கும் நாங்களே டப் செய்துள்ளோம். மிகவும் அனுபவித்து அதைச் செய்தேன். தமிழ் எனக்கு இரண்டாவது தாய்மொழி. நான் சென்னையில்தான் பிறந்தேன். தி.நகரில்தான் படித்தேன்.ஒவ்வொருமுறை சென்னைக்கு வரும்போதும்வீட்டிற்குச் செல்வதுபோல உணர்கிறேன். நான் அனைத்து நிகழ்ச்சிகளிலுமே இதைக் கூறுகிறேன். இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த ராஜமௌலி சாருக்கு நன்றி" எனக் கூறினார்.

ramcharan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe