Skip to main content

தங்கமயில் விருது பட்டியலில் தமிழ் படம் - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Published on 24/11/2022 | Edited on 24/11/2022

 

tamil movie kurangu pedal nominate  in important category award

 

53-வது சர்வதேச இந்தியத் திரைப்பட விழா கோவாவில் நடைபெற்று வருகிறது. பல்வேறு நாடுகளிலிருந்து சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படும் இந்த விழா வருகிற 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், திரைப் பிரபலங்கள் அஜய் தேவ்கன், வருண் தவான், கார்த்திக் ஆர்யன், மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தாண்டிற்கான இந்தியத் திரைப்பட ஆளுமை விருது பிரபல நடிகர் சிரஞ்சீவிக்கு வழங்கப்படுகிறது.

 

இந்த நிகழ்ச்சியில் இந்தியத் திரைப்பட ஆளுமை, தங்கமயில், வெள்ளிமயில், சிறந்த இயக்குநர், நடிகர், நடிகை எனப் பல்வேறு விருதுகள் வழங்கப்படுகிறது. இதில் இந்தாண்டிற்கான இந்தியத் திரைப்பட ஆளுமை விருதை பிரபல நடிகர் சிரஞ்சீவி பெறுகிறார். மேலும் சூர்யாவின் 'ஜெய் பீம்' படம் சிறப்பு திரையிடலிலும், 'கிடா' எனும் படம் ஃபிலிம் ஃபோக்கஸ் பிரிவிலும் இடம் பெற்றுள்ளது. 

 

இதில் முக்கியத்துவம் வாய்ந்த விருதாக தங்கமயில் விருது பார்க்கப்படுகிறது. இதில் தமிழ் படமான 'குரங்கு பெடல்' போட்டியிடுகிறது. இப்படம் விருதை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

லியோ வெற்றி விழா; இறுதி நேரத்தில் விஜய் எடுத்த திடீர் முடிவு

Published on 01/11/2023 | Edited on 01/11/2023

 

Leo Victory Festival; Vijay's decision to avoid crowds of fans

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் தயாரிப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 19 ஆம் தேதி வெளியான படம் லியோ. பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்து வருகிறது.

 

இப்படத்தின் வெற்றிவிழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிலையில் மாலை 7 மணிக்கு மேல் விழா தொடங்கவுள்ளது. விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்துகொள்கிறார்கள். இதனால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படாதவாறு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அரங்கத்தின் வெளியில் மதியம் முதலே ரசிகர்கள் குவியத் தொடங்கிவிட்டனர். தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகாவில் இருந்தும் ரசிகர்கள் வருகை தந்துள்ளனர்.

 

மேலும் பல்வேறு நிபந்தனைகளுடன்  5 கட்ட சோதனைகளுக்கு பிறகே உள்ளே அனுமதித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள 6 மணிக்கு விஜய் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரசிகர்கள் கூட்டம் இதனால் அதிகரிக்கும் என இன்று மாலை 3 மணிக்கே அவர் ரகசியமாக கார் ஒன்றில் நேரு விளையாட்டு அரங்கிற்கு வந்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

Next Story

“அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது” - லியோ வழக்கறிஞர்கள் குழு பேட்டி

Published on 17/10/2023 | Edited on 17/10/2023

 

 'There is hope of getting permission for the 7 am show'-Leo's lawyers team interviewed

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லியோ'. இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். லலித் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் யு/ஏ சான்றிதழுடன் வருகிற 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

 

இந்நிலையில் லியோ திரைப்படத் தயாரிப்பு நிறுவன வழக்கறிஞர்கள், சென்னையில் உள்ள உள்துறை செயலாளர் அமுதாவுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளனர். லியோ திரைப்படத்திற்கு காலை 7:00 மணி காட்சிக்கு அனுமதி கேட்டு 'செவன் ஸ்க்ரீன்' பட நிறுவன வழக்கறிஞர்கள் வேலூர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் உள்துறை செயலாளர் அமுதாவை சந்தித்துள்ளனர்.

 

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர்கள் குழு தெரிவிக்கையில், ''இப்பொழுது எங்களுக்கு தேவை ஐந்து காட்சிகள் திரையிடலாம் என்று சொல்லி இருந்தால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இருந்திருக்காது. ஆனால் ஷோவின் டைமிங் மென்ஷன் பண்ணியதால் சிக்கலாகிறது. முதல் ஷோ 9 மணி என மென்ஷன் பண்ணியதால் ஒன்பதில் இருந்து ஒன்றரை மணியில் எங்களால் எதுவும் பண்ண முடியாது. அதனால் கால இடைவெளி பத்தாது என்று சொல்லித்தான் மனு கொடுத்துள்ளோம்.

 

 'There is hope of getting permission for the 7 am show'-Leo's lawyers team interviewed

 

7 மணிக்கு ஷோ ஆரம்பிக்க அனுமதி கேட்டு மனு கொடுத்துள்ளோம். மற்ற மாநிலங்களில் காலை 4 மணி காட்சிகளுக்கு அனுமதி உள்ளது. பார்வையாளர்கள் மிகவும் முக்கியமானவர்கள். நீதிபதி அவர்கள் சொல்லும் போது குறிப்பிட்டு சொன்னார். 250 பேரை ஒரு நிமிடத்தில் வெளியே போகச் சொல்லி விரட்ட முடியாது. அதேபோல 250 பேரை உடனடியாக உள்ளே சென்று சீட்டில் உட்காருங்கள் என்று சொல்ல முடியாது. அவர்கள் டூவீலர்களில் கார்களின் வருவார்கள். அதை பார்க் செய்துவிட்டு உள்ளே வரவேண்டும். பின்னர் திரைப்படத்தை பார்த்தவர்கள் கார், டூவீலர்களை எடுத்துக்கொண்டு வெளியேற வேண்டும். அப்படி இருசக்கர வாகனங்களை எடுத்தால் தான் அடுத்த ஷோ பார்க்க வருபவர்கள் உள்ளே வர முடியும். அதற்கான கால இடைவெளி வேண்டும் என்பதைத்தான் நாங்கள் வலியுறுத்தி உள்ளோம். பெரியவர்கள் இருப்பாங்க, சுகர் பேஷண்ட் இருப்பாங்க. அவர்களுக்கு யூரின் ப்ராப்ளம் இருக்கும். அதற்கெல்லாம் டைம் கொடுக்க வேண்டும் அல்லவா. 5 ஷோவிற்கான அனுமதி கொடுத்தாச்சு. அதற்கான கால இடைவெளி அதிகம் வேண்டும் என கேட்கிறோம். கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என்றனர்.