Advertisment

கழுத்தை அறுத்து விடுவேன் என மிரட்டிய பயில்வான் ரங்கநாதன்; கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்

tamil makkal iyakkam k rajan complains against Bayilvan Ranganathan

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராகஅறியப்பட்டவர் பயில்வான் ரங்கநாதன். ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில்நடித்துள்ள இவர்தற்போது சினிமா துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளின்தனிப்பட்ட வாழ்க்கையை யூடியூப் தளத்தில் பகிர்ந்து வருகிறார். நடிகர்கள் பற்றியஇவரின்பேச்சு எல்லையை மீறி போவதாக கூறி பலரும்புகார் கூறி வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் நடிகர் பயில்வான் ரங்கராஜன் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தமிழ் மக்கள் இயக்கத்தின் தலைவர் கே.ராஜன் புகார் அளித்துள்ளார். அதில்,சமீப காலமாக யூடியூப் சேனல்களில் பெண்களுக்கும் திரைப்பட நடிகர்கள், நடிகைகளுக்கும் எதிராக ரகசியங்களை வெளியிடுகிறேன் என்று சொல்லி பொய்யான செய்திகளை பயில்வான் ரங்கநாதன் ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் பேசி வருகிறார். இதனால் பல பெண்கள் திரைப்பட நடிகர், நடிகைகள் மிகவும் வேதனையுடன் மன உளைச்சலில் கஷ்டப்படுகிறார்கள். ஆனால் தொடர்ந்து பயில்வான் ரங்கநாதன் காசுக்காக இந்த செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

Advertisment

அந்தவகையில் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்குபேட்டி அளித்த அவர், "என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது, என்னை யாராவது தாக்க வந்தால் அரிவாளால் அவர்களின் கழுத்தை அறுத்து விடுவேன், நான் தூத்துக்குடிக்காரன்" என எல்லா பெண்களையும், அச்சுறுத்தி இருக்கிறார். அதனால் பாதிக்கப்பட்ட நடிகர், நடிகைகள் அவர் மீது புகார் அளிக்க அஞ்சுகிறார்கள். இதனால்அவரின்பேச்சும் செயலும் வன்முறையை தூண்டி சட்டம் ஒழுங்கை பாதிக்கச் செய்வதால், பயில்வான் ரங்கநாதன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Chennai Police Commissioner complaints ranganathan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe