Skip to main content

தமிழ் சினிமாவின் டாப் ஃபைவ் டான்கள்

Published on 18/02/2022 | Edited on 18/02/2022

 

tamil cinema top 5 don movie actors

 

உலக சினிமா ரசிகர்களிடையே டான் படங்கள் என்றாலே கொஞ்சம் அலாதி தான். அந்த வகையில் டான் படங்களின் வாசலை முதலில் திறந்து வைத்தவர் இயக்குநர் பிரான்சிஸ் ஃபோர்டு கொப்போலா. இவர் இயக்கத்தில் கடந்த 1972 ஆம் ஆண்டு வெளியான  ’தி காட்ஃபாதர்’ ரசிகர்களை திரும்பிப் பார்க்கவைத்த முதல் டான் படம்.  பொதுவாக இந்த மாதிரியான படங்களில், தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்காக வேண்டியதை செய்வதே டான்களின் தலையாயக் கடமை. அது கொலையாக இருந்தாலும் சரி. இடையிடையே பகைகளுக்காக சில பழிவாங்கல்கள். இதே ஜானரில் வெளியானது தான்  காட்ஃபாதர் படமும். இப்படத்தின் நடிகர் மார்லன் பிராண்டோ தனது நடிப்பால் ரசிகர்களை மிரட்டியிருப்பார்.  இதன் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து உலகில் உள்ள பல மொழிகளில் அவர்களுக்கு ஏற்றார் போல் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப டான் படங்களை இயக்கி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாக்களில் வெளியான டான் படங்களையும், நம்மை மிரட்டிய டாப் ஃபைவ் டான்கள் யார் யார் என்று பாப்போம்.

 

நாயகன் (கமல்ஹாசன்) கடந்த 1987 ஆம் ஆண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான நாயகன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மும்பையை கதைக்களமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படத்தில் தங்கள் பகுதியில் வசிக்கும் மக்களை காப்பாற்றும் ஆபத்பாந்தவனாக கமல்ஹாசன் நடிப்பில் மிரட்டியிருப்பார். இப்படத்தில் கமல் பேசும் வசனமான, ”நாலு பேருக்கு நல்லதுன்னா ஏதும் தப்பில்ல" என்ற வசனம் இன்றளவும் புழக்கத்தில் இருந்து வருகிறது. 

 

பாட்ஷா (ரஜினிகாந்த்) : கடந்த 1995 ஆம் ஆண்டு இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் பாட்ஷா. இந்த படமும் கூட மும்பை கதைக்களத்தை மையமாக கொண்டே வெளியானது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு என அராஜகம் செய்து வரும் ரகுவரனை அழிப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் டானாக மாறுவார். இப்படத்தில் ரஜினியின் வசன உச்சரிப்பும் ஸ்டைலும் பலரையும் கவர்ந்தது. அத்துடன், இப்படத்தில் ரஜினி பேசிய, ”நான் ஒரு தடவ சொன்னா, நுறு தடவ சொன்ன மாதிரி” என்ற வசனம் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடிக்க பாஷாவையும், ரஜினியையும் தமிழக மக்கள் கொண்டாடித் தீர்த்தனர்.  இதை போன்று 1980 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான பில்லா படம் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது 

 

பில்லா (அஜித்) : ரஜினி நடிப்பில் வெளியான பில்லா படத்தை ரீமேக் செய்து நடிகர் அஜித் நடித்திருந்தார். இப்படத்தில் நடிகர் அஜித் கோட் சூட்டுடன் ஸ்டைலாக மிரட்டியிருப்பார். இப்படத்தில் ஒளிப்பதிவு, ஸ்டண்ட் காட்சிகள் பெரிதும் பேசப்பட்டன. நடிகர் அஜித்துக்கு ஒரு கம்பேக் படமாக அமைந்தது. 

 

விக்ரம் வேதா ( விஜய் சேதுபதி) : இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா திரைப்படம் வெளியாகி பலரையும் ஆச்சர்யப்படுத்தியது. சமகால எதார்த்த வாழ்வியலுடன் விஜய் சேதுபதிக்கே உரித்தான வசன உச்சரிப்பும், நடிப்பும் கலந்த கேங்ஸ்டர் படமாக வெளியான இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இப்படத்தில் நடிகர் விஜய் சேதிபதி மாதவனிடம் ஒரு கதை சொல்லட்டுமா சார் என கேட்கும் வசனத்திற்கே பல ரசிங்கர்கள் உள்ளனர்.

 

ஜிகர்தண்டா (பாபி சிம்ஹா) : இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா திரைப்படம் பலரையும் கவர்ந்தது. இந்த படத்தில் அசால்ட் சேதுவாக வரும் பாபி சிம்ஹா நடிப்பில் பலரையும் மெய் சிலிர்க்க வைத்திருப்பார். அத்துடன் இந்த படத்தில் நடித்ததற்காக பாபி சிம்ஹாவிற்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“உறையவைக்கும் காட்சிகள்” - பிரபலங்களின் பாராட்டில் ஆடுஜீவிதம் 

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
maniratnam kamal praised aadujeevitham movie

மலையாள இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனை படைத்த ‘ஆடுஜீவிதம்’ நாவலை, அதே தலைப்பில் மலையாளத்தில் படமாக்கப்பட்டுள்ளது. கேரளத்திலிருந்து குடும்ப வறுமையை தீர்ப்பதற்காக அரேபிய தேசத்திற்கு செல்லும் நஜீப் என்ற நபர், அங்கு ஆடு மேய்க்கும் தொழிலாளியாகச் சேர்கிறார். அங்கு அவர் சந்திக்கும் அனுபவங்கள், வலியை விரிவாக இந்த நாவல் எடுத்துரைக்கிறது. 

இப்படத்தை பிளெஸ்ஸி இயக்க பிருத்விராஜ், அமலாபால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் வருகின்ற 28 ஆம் தேதி இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது. 

இந்த நிலையில் இப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அதில் கமல்ஹாசன், மணிரத்னம் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். திரையிடலுக்கு பின் பலரும் படக்குழுவை பாராட்டிய நிலையில் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் படக்குழுவினரை வெகுவாக பாராட்டினர். 

கமல்ஹாசன் கூறுகையில், “இயக்குநர் பிளெஸ்ஸிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். உண்மையாகவே கடின உழைப்பை கொடுத்துள்ளார். கேமராமேனும் சிரமப்பட்டுள்ளார். படக்குழு இவ்வளவு தூரம் செல்வார்கள் என நினைக்கவில்லை. சிறந்த படம் என படமெடுப்பவர்கள் புரிந்து கொள்வார்கள். அதை மக்களும் புரிந்து கொள்வார்கள் என நினைக்கிறேன்” என்றார். மணிரத்னம், பேசுகையில், “உறையவைக்கும் காட்சிகள். ப்ரித்விராஜ் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். மொத்த படக்குழுவும் தான். எப்படி இப்படத்தை உருவாக்கினார்கள் என தெரியவில்லை. அவர்கள் மீது பொறாமை கொள்ளவில்லை. படக்குழுவிற்கு வாழ்த்துகள்” என்றார். 

Next Story

“தம்பி, தங்கைகளே...” - த.வெ.க தலைவர் விஜய் வாழ்த்து

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
vijay wishes 10 students for public exam

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை (25.03.20240) முதல் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 8 வரை நடைபெறவுள்ள இந்த தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதைத் தொடர்ந்து பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதியும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் மே 14ம் தேதியும் வெளியிடப்படுகிறது.  

இந்த நிலையில் மாணவ, மாணவிகள் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர் அவர்களுக்கு ஆசிரியர்கள், பெற்றோர் அல்லாது திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த மாத இறுதியில் ராஷ்மிகா மந்தனா மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்து அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

இந்த நிலையில் நடிகரும் த.வெ.க-வின் தலைவருமாகிய விஜய் தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அக்கட்சியின் எக்ஸ் வலைத்தள பதிவில், “தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை,  நாளை எழுதவுள்ள என் அருமை தம்பி, தங்கைகள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற, நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என விஜய் கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜய் கடந்த ஆண்டு ஜூன் மாதம், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.