Skip to main content

"புலி வருது... புலி வருதுனு சொன்னாங்க... ஆனா" - ரஜினியின் அரசியல் வருகையும், சினிமா பிரபலங்களின் ரியாக்ஷனும்!

Published on 03/12/2020 | Edited on 03/12/2020

 

rajni

 

நடிகர் ரஜினிகாந்த், ஜனவரியில் கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபடவுள்ளதாக இன்று அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, சினிமாத் துறையைச் சார்ந்த பல்வேறு பிரபலங்கள், ரஜினிகாந்தின் அரசியல் வருகையை வரவேற்றும், அவரை வாழ்த்தியும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

 

இசையமைப்பாளர் அனிருத், "இனிதான் ஆரம்பம், தலைவர் ஆட்டம் ஆரம்பம் என 'பாபா' முத்திரையோடு" தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


ரஜினியை வைத்து, 'பேட்ட' படத்தை இயக்கிவருபவரும், ரஜினியின் தீவிர ரசிகருமான கார்த்திக் சுப்புராஜ், "வாவ் தலைவா... வா தலைவா!" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 


ரஜினியின் கட்சித் தொடங்கும் அறிவிப்பை வரவேற்றுள்ள நடிகரும் - நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ், "இந்தத் தருணத்திற்காகக் காத்திருந்த உங்களின் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். உங்கள் லட்சியங்கள் அனைத்தும் நிறைவேற, நான் ராகவேந்திரா சாமியை வேண்டிக் கொள்கிறேன். இந்தக் கடினமான கரோனா காலத்திலும், உங்கள் உடல்நிலையைப் பொருட்படுத்தாமல் மக்களுக்குச் சேவை செய்ய முன்வந்துள்ளீர்கள். உங்கள் கனவு நிச்சயமாக நிறைவேறும்" எனக் கூறியுள்ளார்.
 

cnc


இயக்குனர் லிங்குசாமி, "புலி வருது... புலி வருதுனு சொன்னாங்க. ஆனா, இப்போ சிங்கமே வந்துருச்சு. வாழ்த்துகள் சார்" என ரஜினியின் அரசியல் வருகைக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.


இயக்குனர் கே.பாலச்சந்தரின் கவிதாலயா பட நிறுவனம், "ரஜினி தனது அரசியல் பயணத்திலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும்" எனக் கூறியுள்ளது.


பின்னணி பாடகர் க்ரிஷ், "வாருங்கள் தலைவா, வாருங்கள்... மாற்றத்திற்கான நேரம்" என ரஜினியின் அரசியல் வருகையை வரவேற்றுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மகிழ்ச்சி..” - அயோத்திக்கு புறப்பட்ட நடிகர் ரஜினி!

Published on 21/01/2024 | Edited on 21/01/2024
Actor Rajini left for Ayodhya!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா வருகிற 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொடக்க விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மாநில அரசும், மத்திய அரசும் செய்து வருகிறது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம், உத்தரப்பிரதேசத்திற்கு புறப்பட்டார். அதேபோல், நடிகர் தனுஷும் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க உத்தரப்பிரதேசம் புறப்பட்டுள்ளார். இருவரும் ஒரே விமானத்தில் பயணிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

ராமர் கோயில் அறக்கட்டளையின் அழைப்பை ஏற்று நடிகர் ரஜினிகாந்த் இன்று உத்தரப் பிரதேசத்திற்கு புறப்பட்டுள்ளார். முன்னதாக அவர் விமான நிலையத்திற்கு செல்வதற்குமுன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள், ‘அழைப்பின் பேரில் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க செல்கிறீர்கள் எப்படி உணர்கிறீர்கள்’ என கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த், “மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்” என்று பதில் அளித்துவிட்டு சென்றார். 

Next Story

“சிந்தனையில் நேர்மை இருந்தால் மன நிம்மதியாக வாழ முடியும்” - நடிகர் ரஜினிகாந்த்

Published on 15/01/2024 | Edited on 15/01/2024
Actor Rajinikanth wishes his pongal celebration

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் இன்று (15-01-2024) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், மதுரை மாவட்டம், அவனியாபுரம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில், 1000 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இந்த போட்டியைக் காண ஏராளமான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “பொங்கல் நல்வாழ்த்துகள். அனைவரும் ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடனும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்று இந்த பொன்னாளில் நான் இறைவனை வேண்டுகிறேன். வாழ்க்கையில் ஒழுக்கம், சிந்தனையில் நேர்மை இருந்தாலே வாழ்க்கை சந்தோஷமாக நிம்மதியாக இருக்கும்” என்று கூறினார்.