Advertisment

"நீங்கள் ஈடுசெய்ய முடியாதவர்" - தமன்னா 

gsgsgbsa

Advertisment

பிரபல திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் (வயது 54) மாரடைப்பால் காலமானார். இயக்குநர் கே.வி.ஆனந்துக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, அவர் உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், இன்று (30/04/2021) அதிகாலை 03.00 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இயக்குநர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை தமன்னா இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில்...

"புகழ்பெற்ற கே.வி.ஆனந்த் சாருடன் பணிபுரியும் அளவுக்கு நான் அதிர்ஷ்டசாலி. ரத்தினம் போன்ற ஒருவரை பார்க்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. எனது தமிழ் திரை படங்களில் மறக்கமுடியாத ஒரு திரைப்படத்தை எனக்குக் கொடுத்தார். சார், நீங்கள் ஈடுசெய்ய முடியாதவர். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி" என பதிவிட்டுள்ளார்.

Tamanna
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe