Tamannaah completes 18 years in cinema industry

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கியிருந்த இப்படம் உலகம் முழுவதும் ரூ.600 கோடியைக் கடந்து வசூல் செய்துள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்ததாக தமிழில் சுந்தர்.சி இயக்கும்'அரண்மனை 4' படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் திரைத்துறைக்கு வந்து 18 ஆண்டுகள் கடந்துவிட்டதாக தெரிவித்து அது குறித்து நெகிழ்ச்சியாக எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார் தமன்னா. அந்த பதிவில், "இளமைக் கனவுகள் முதல்பருவ உணர்தல்வரை. துன்பத்தில் இருக்கும் ஒரு பெண், முதல் பக்கத்துவீட்டு பெண், மோசமான பவுன்சர், ஒரு பயமற்ற புலனாய்வாளர் வரை… என்ன ஒரு பயணம். இந்த 18 வருட அற்புதமான பயணத்தில் என்னுடைய உண்மையான முதல் காதல், நடிப்பு" என குறிப்பிட்டு ஆரம்பத்திலிருந்து அவர் நடித்த சில முக்கியமான கதாபாத்திரங்களை கொண்டு எடிட் செய்த ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

Advertisment