tamannaah about tabu

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட சில இந்திய மொழிகளில் கவனம் செலுத்தி வந்த தமன்னாதற்போது தெலுங்கில் சிரஞ்சீவியின் 'போலா ஷங்கர்', இந்தியில்'போலே சூடியன்' மற்றும் மலையாளத்தில் 'பாந்த்ரா' உள்ளிட்ட படங்களில்நடித்து வருகிறார். மேலும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். மேலும் சுந்தர்.சி இயக்கி வருவதாகக் கூறப்படும் 'அரண்மனை 4' படத்தில் நடித்து வருவதாகமுணுமுணுக்கப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில் தமன்னா, நடிகை தபு மீது க்ரஷ் இருந்ததாகத்தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒரு பேட்டியில் பேசிய அவர், "இன்றைய சூழல் முற்றிலும் மாறிவிட்டது.அதை விரும்புகிறேன். நான் நடிகைகள் கரீனா கபூர், தபுபோன்றோரைபார்த்து வளர்ந்த ஒரு நபர். அவர்தங்களைத் தாங்களே புதுப்பித்துக் கொண்டநடிகைகள். குறிப்பாக தபுவை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மீது ஒரு தனி ஈர்ப்பு இருக்கிறது. ஒவ்வொரு வயதிலும் நம் பெண்கள் அவரை போன்று இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.

Advertisment

விஜய் வர்மாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். அவ்வளவுதான். இதுபோன்ற காதல் வதந்திகள் தொடர்ந்து பரவி வருகின்றன. அவை அனைத்தையும் தெளிவுபடுத்த வேண்டிய அவசியமில்லை. இதற்கு மேல் இதுபற்றி சொல்வதற்கு ஏதுமில்லை. நடிகர்களை விட நடிகைகளே அதிகமாக திருமண வதந்திகளில் சிக்குகிறார்கள். அது ஏன் நடக்கிறது என்பது தெரியவில்லை. இதனால், நான் பலமுறை திருமணம் செய்து கொண்டதாக உணர்கிறேன். ஆனால், உண்மையில் நான் திருமணம் செய்துகொண்டால் என்ன நடக்கும் என்று தெரியவில்லை. அவர்கள் உற்சாகமாவார்களாஅல்லது இதுவும் வதந்திதான் என நினைப்பார்களா" என்றார்.