Advertisment

"அமர் சார் உங்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை" - தயாரிப்பாளர் டி. சிவா உருக்கம்!

vdsbdsbdsb

Advertisment

கங்கை அமரனின் மனைவியும் இயக்குநர் வெங்கட் பிரபுவின் தாயாருமான மணிமேகலை காலமானார். அவருக்கு வயது 69. உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தார். இதனையடுத்து, திரைத்துறை பிரபலங்கள் பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் வெங்கட் பிரபுவின் ‘சரோஜா’,'பார்ட்டி' படங்களின் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில்...

"திருமதி மணிமேகலை கங்கை அமரன்,வெங்கட் பிரபு, பிரேம்ஜியுடன் பழகும் முன்பே பழக்கமானவர். அன்பும் விருந்தோம்பலும் ஒருங்கே பெற்ற தாய். எப்போதும் சிரித்தமுகம் கலகல என்னப்பேசும் கலாம்மா. மறக்க முடியாத நினைவுகள். அமர் சார், பிரபு, பிரேம்ஜி ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. அம்மாவின் ஜீவன் உங்களோடு எப்போதும் இருக்கும்" என பதிவிட்டுள்ளார்.

t siva
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe