Skip to main content

"மன்னிப்பே இருக்கக் கூடாது" - பாலியல் விவகாரம் குறித்து தயாரிப்பாளரை மீண்டும் சாடிய நடிகை

Published on 14/06/2023 | Edited on 14/06/2023

 

Swastika Mukherjee producer misbehav issue

 

பெங்காலி மற்றும் இந்தி திரையுலகில் பல்வேறு படங்களில் நடித்துள்ளவர் நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி. மேலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இப்போது அவர் நடித்துள்ள படம் 'ஷிப்பூர்'. இப்படம் கடந்த மே 5ஆம் தேதி வெளியாகும் என அறிவித்த நிலையில் சில காரணங்களால் வெளியாகவில்லை. 

 

கடந்த ஏப்ரல் மாதம் இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சந்தீப் சர்க்காரின் மீது நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி பாலியல் குற்றச்சாட்டு வைத்தார். அவர் கூறுகையில், "தனது மார்பிங் செய்யப்பட்ட நிர்வாண புகைப்படங்களை வைத்திருப்பதாகவும் ஒத்துழைக்காவிட்டால் அவற்றை ஆபாச வலைத்தளங்களில் வெளியிடுவோம் என்று சர்கார் சார்பாக ரவீஷ் ஷர்மா என்ற நபரிடமிருந்து மின்னஞ்சல்கள் மூலம் அச்சுறுத்தினர்" எனக் குறிப்பிட்டிருந்தார். 

 

மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. அதில் வருகிற 30ஆம் தேதி இப்படம் வெளியாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ட்ரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ளவில்லை. இதனை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து பதிவிட்ட ஸ்வஸ்திகா முகர்ஜி பாலியல் புகார் குறித்து மறுபடியும் பேசியுள்ளார். 

 

அந்தப் பதிவில், "பாலியல் துன்புறுத்தல் ஒரு நகைச்சுவை விஷயம் அல்ல. அதற்கு மன்னிப்பே இருக்கக் கூடாது. தயாரிப்பாளர்கள் எல்லாம் குளிர்ச்சியாகவும் கூலாகவும் இருப்பதாக நினைக்கலாம். ஆனால் உண்மையில் அப்படி இல்லை. அப்படி ஒருபோதும் இருக்காது" என தனது ஆதங்கத்தை குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.

Next Story

படம் வெளியாவதற்கு முன்பே பரிசு - இயக்குநருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தயாரிப்பாளர்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
star movie director elan got a plot from producer before a movie release

டாடா பட வெற்றியை தொடர்ந்து 'பியார் பிரேமா காதல்' பட இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின், ஸ்டார் படத்தில் நடித்துள்ளார். மேலும் நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் நடிக்கிறார். இரு படத்தின் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதில் ஸ்டார் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினி சித்ரா என இரண்டு நிறுவனங்கள் தயாரிக்கும் இப்படத்தில் லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்படம் அடுத்த மாதமான மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதுவரை படத்தின் 4 பாடல்கள் வெளியான நிலையில் அண்மையில் வெளியான ‘மெலோடி’ பாடல் ரசிகர்களை கவர்ந்தது. இதில் கவின் பெண் வேடமிட்டு நடனமாடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

star movie director elan got a plot from producer before a movie release

இந்த நிலையில் இயக்குநர் இளனுக்கு தயாரிப்பாளர் பெண்டேலா சாகர் வீட்டு மனை வாங்கி கொடுத்துள்ளார். இதனை இளன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, மகிழ்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “ஸ்டார் படத்தை பார்ப்பதற்கு முன்பே ஹைதராபாத்தில் எனக்கு ஒரு வீட்டு மனை வாங்கி தந்துள்ள எனது தயாரிப்பாளர் பெண்டேலா சாகருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். நான் அவரை படம் பார்க்க அழைத்தபோது, ​​அவர் அதைப் பார்ப்பதற்கு முன்பு எனக்கு பரிசளிக்க வேண்டும் என்று கூறினார்” என பதிவிட்டுள்ளார்.